தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களே இந்த வன்முறையை கையில் எடுப்பது தான் வருத்தம் அளிக்கிறது.
அண்மையில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. இதில் ஒரு பெரிய அருவா தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் ரத்தக்கறைகள் இருந்தன.
அதுபோல கமல் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விக்ரம்’ படத்தில் துப்பாக்கி ஏந்தியப்படியே இருந்தார். படம் முழுவதும் வன்முறை தெளிக்கப்பட்டு இருந்தது நாம் அறிந்த ஒன்றுதான்.
அது போல அஜித்தின் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ பட போஸ்டரிலும் விஜய் கையில் துப்பாக்கி வைத்த படியே போஸ் கொடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பார்க்கப்படும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நால்வருமே வன்முறையை கையில் எடுத்து இருப்பதாகவே தெரிகிறது.
இதனால் இன்றைய தலைமுறை நடிகர்களும் இயக்குனர்களும் வன்முறை சார்ந்த படங்களையே தயாரித்தும் நடித்தும் வருகின்றனர்.
குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது என்று கூட சொல்லலாம்.
தமிழில் சமீபத்தில் வெளியான 80% படங்கள் சென்சாரில் ஏ சர்டிபிகேட் அல்லது யுஏ சர்டிபிகேட் உடன் வருகின்றன.
இதனால் தங்கள் வீட்டு குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் செல்லவே பெற்றோர்களும் மூத்தவர்களும் தயங்குகின்றனர்.
வன்முறை காட்சிகளை தவிர்த்து குடும்பம் சென்டிமென்ட் உள்ளிட்ட காட்சிகளை வைத்தால் குடும்பத்தோடு படம் பார்க்க வருவார்கள். இதனால் படத்தின் வசூலும் நிறைய வருமே.
இந்த வன்முறை இப்படியே தொடர்ந்தால் வளரும் குழந்தைகளும் வன்முறை உணர்வோடு வளர மாட்டார்களா?
இந்த நிலை மாறுமா? தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் சிந்திப்பார்களா?
Kollywood heroes earn money through violence