களத்தூர் கிராமம் படத்தை பார்த்து பாராட்டி இசையமைத்த இளையராஜா

களத்தூர் கிராமம் படத்தை பார்த்து பாராட்டி இசையமைத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalathur gramamA.R மூவி பாரடைஸ் சார்பில் A.R.சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் இது என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.

இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டப்போது, அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்றது.

தற்போது களத்தூர் கிராமம் வரும் அக்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் A.Rசீனுராஜ் நம்மிடம் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்..

“இப்படத்தில் நடித்துள்ள கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் அனைவருமே தங்களது நூறு சதவீத பங்களிப்பை தந்துள்ளனர்.. இரண்டு வருடங்களாக நடைபெற்ற கடுமையான படப்பிடிப்பில் முகம் சுளிக்காது படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு தந்தது மறக்கவே முடியாது.

களத்தூர் கிராமம் படத்தின் கதை நடக்கும் கதைக்களம் குறித்து நாங்கள் மனதில் நினைத்து வைத்த மாதிரியான கிராமத்திற்கான தேடலில் பல நாட்களாக எதுவுமே கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 125 கிராமங்கள் வரை பார்த்தும் எதுவும் செட்டாகததால் கொஞ்சம் சோர்வு அடைந்ததும் உண்மைதான்.

அந்தநிலையில் தான் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கிராமங்களை பார்க்கலாம் என கிளம்பினோம். போகும் வழியில் புதுப்பட்டி என்கிற கிராமத்திற்குள் சென்றபோது அங்குள்ள கோவிலின் முன்னால் நாங்கள் சென்ற வாகனம் நின்றது..

அதை ஒரு தடங்கல் என நினைக்காமல், சரி.. வண்டி சரியாகும் வரை புதுப்பட்டி கிராமத்தை உள்ளே சென்று பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால், நாங்கள் மனதில் நினைத்து வைத்த ‘களத்தூர் கிராமம்’ ஆகவே அச்சு அசப்பில் இருந்தது அந்த ஊர். இப்படித்தான் களத்தூர் கிராமத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்..

நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதி மிகவும் வறண்ட பகுதி.. சுமார் ஐந்து கிமீ சுற்றுப்புறத்திற்கு வேறு எந்த ஊரும் இல்லை. சில நேரங்களில் தண்ணீர் வசதி இல்லாமல் கூட கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.

கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் விட்டுவிட்டு நடைபெற்ற படப்பிடிப்பின்போது அந்தப்பகுதி மக்கள் எங்களுக்கு நிறையவே ஒத்துழைப்பு தந்தனர்..

ஒருநாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென மழைபெய்ய ஆரம்பித்தது.. அன்றைய தினம் மிக முக்கியமான காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. இதற்காக கிஷோர் சுமார் ஆறு மணி நேரம் மேக்கப் போட்டு தயாராகி இருந்தார், இந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்ததும், என்ன செய்வதென தெரியாத நிலையில், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்..

சொன்னால் நம்ப மாட்டீர்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுத்தமாக நின்றே விட்டது.. நாங்கள் படப்பிடிப்பை தடங்கலின்றி நடத்தி முடித்தோம்.

ஆனால் இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் படப்படிப்பு நடத்திய கிராமத்தை தவிர சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாம் மழை விடாமல் கொட்டித்தீர்த்தது தான் பிரார்த்தனைக்கு பலன் உண்டு என உணர்ந்துகொண்ட முக்கிய தருணம் அது.

களத்தூர் கிராமம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தால் படம் இன்னும் மக்களிடம் எளிதாக சென்று சேரும் என விரும்பி அவரை சந்தித்தபோது எங்களிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.

கதை நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தை நீங்கள் எப்படி எடுப்பீர்கள் எனத்தெரியாது. படத்தை எடுத்துவிட்டு வந்து காட்டுங்கள். அதைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்கிறேன்’ என சொல்லிவிட்டார்.

அவர் சொன்னபடி, படத்தை எடுத்து முடித்து அவரிடம் காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகப் பாராட்டியவர், இது எனக்கான படம், எனக்கான வேலைகள் இதில் நிறைய இருக்கிறது என உடனே இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்தப்படத்திற்காகத் தனி ஈடுபாடு காட்டி, மூன்று பாடல்களுக்கும் சிறப்பாக இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்ல படத்தின்பால் ஈர்க்கப்பட்டு அவரே ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம், இதை சின்ன படம் என்று அவர் ஒதுக்கவும் இல்லை.. இவ்வளவு தொகை எனக்கு வேண்டும் என எந்த இடத்திலும் அவர் கேட்கவும் இல்லை.

இளையராஜாவின் இசையில் இந்தப்படம் புது வடிவம் பெற்றுள்ளது என்றே சொல்லலாம். படத்தை பார்த்துவிட்டு ஒரு மூத்த பத்திரிகையாளர், “இது படம் என்பதையும் தாண்டி, ஒரு வாழ்வியல் பதிவு’ என பாராட்டினார்.. இரண்டு வருடம் கஷ்டப்பட்டதற்கான வெகுமதி தான் அவரது பாராட்டு.

படத்தின் இயக்குனர் அத்வைதனுக்கு இது முதல் படம் தான். இப்படி ஒரு கதையை அவர் சொன்னதுமே இப்படத்தை எடுத்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டார். படம் எடுத்த அனுபவம் இன்னும் பல நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களைத் தயாரிக்கவேண்டும் என்கிற ஆசையையும் உத்வேகத்தையும் எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

“’களத்தூர் கிராமம்’ படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தநிலையில் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான எண்ணிகையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அந்த சூழ்நிலையில் நாங்கள் படத்தை வெளியிட்டிருந்தால் மிகுந்த பொருளாதார பின்னடைவை சந்தித்திருப்போம். படமும் மக்களின் பார்வைக்கு சரியாக சென்று சேர்ந்திருக்காது.

ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருக்கிறது.. எங்களது இரண்டு வருட கடின உழைப்பு இந்தப்படம். அதனால் இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக கொஞ்சம் காத்திருந்தாலும் பரவாயில்லை என முடிவு செய்து, தற்போது அக்-6ஆம் தேதி ரிலீஸ் செய்கிறோம்..

நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது.

படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறினார் தயாரிப்பாளர் A.R சீனுராஜ்

Kishore starrer Kalathur Gramam is set to release on 6th Oct 2017

kalathur gramam stills

மலேசியாவில் நடைபெற்ற பிளஸ் ஆர் மைனஸ் இசை வெளியீட்டு விழா

மலேசியாவில் நடைபெற்ற பிளஸ் ஆர் மைனஸ் இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

plus or minus movie cd designமலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும் ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும் விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது.

விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார்.

மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட, மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் மக்கள் ஆட்டோ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

மனித செம்மல் அம்மா ரத்னவள்ளி, டத்தோ பரமசிவன் DCP POLICE OF MALAYSIA, டத்தோ குமரன் HEAD OF POLICE FORCE, டத்தோ முனியாண்டி HEAD OF MAKKAL SEVAI FOR MALAYSIA, டத்தோ ஸ்ரீ சையத் இப்ராஹிம் PRESIDENT KIMMA ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

AbiSaravanan starrer Plus Or Minus Teaser Launched in Malaysia

plus or minus music launch

https://www.youtube.com/watch?v=hDCZ1lsxwN8

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் அறிமுகமாகிறார் விக்ரம் மகன் துருவ்

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் அறிமுகமாகிறார் விக்ரம் மகன் துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Its Official Vikram son Dhruv debut movie Arjun Reddy Tamil remakeசந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த படம் அர்ஜீன் ரெட்டி.

தெலுங்கில் ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

எவரும் எதிர்பாராத வகையில் கிட்டதட்ட 10 மடங்கு லாபத்தை இப்படம் பெற்றதால் இதன் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி உருவானது.

இந்நிலையில் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Its Official Vikram son Dhruv debut movie Arjun Reddy Tamil remake

யார் தடுத்தாலும் சிவாஜி மணிமண்டப விழாவிற்கு வந்திருப்பேன்: கமல்

யார் தடுத்தாலும் சிவாஜி மணிமண்டப விழாவிற்கு வந்திருப்பேன்: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal speechசிவாஜிகணேசன் மணிமண்டபம் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் கமல் பேசியதாவது…

அமைச்சர் பெருமக்கள் மற்றும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மாநிலம், இந்தியா, ஆசியா எல்லைகளை கடந்து ஜெயித்தவர் சிவாஜி கணேசன்.

எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

அந்த நடிகனின் குடும்பத்தில் தாமதமாக சேர்ந்த பிள்ளை நான். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியோடு இணைந்தேன்.

நான் நடிகனாக இல்லாவிட்டாலும் இந்த விழாவுக்கு ஒரு சினிமா ரசிகனாக வந்திருப்பேன்.

யார் தடுத்தாலும் இந்த விழாவுக்கு வந்திருப்பேன்.” என்று பேசினார் கமல்.

Kamalhassan speech at Sivaji manimandapam inauguration function

அரசியலில் ஜெயிக்க என்ன வேண்டும் என கமலுக்கு தெரியும்… ரஜினி

அரசியலில் ஜெயிக்க என்ன வேண்டும் என கமலுக்கு தெரியும்… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal knew how to win in Politics says Rajini at Sivaji Manimandapam inauguration functionசிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ரஜினி, கமல், பிரபு, விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது….

நடிகர் திலகம் அரசியல் பாடத்தையும் நடிகர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

அவர் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்றுப்போனார். அது அந்த தொகுதி மக்களுக்குத்தான் அவமானம்.

வெறும் சினிமா புகழை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியும் என்பதுதான் அது.

அரசியலில் ஜெயிக்க பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு என்ன வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.

எனக்கு சத்தியமா தெரியாது. ஆனால் கமல்ஹாசனுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

அந்த ரகசியத்தை கமல் தெரிவிக்க மாட்டார். என் திரையுலக அண்ணா நீங்க சொல்லுங்க என்று கேட்டாலும் சொல்ல மாட்டார். என்னுடன் வந்தா சொலித்தருகிறேன் என்கிறார்” என்று பேசினார் ரஜினிகாந்த்.

Kamal knew how to win in Politics says Rajini at Sivaji Manimandapam inauguration function

தான் அதிர்ஷ்டசாலி என்பதை ஓபிஎஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறார்… ரஜினி

தான் அதிர்ஷ்டசாலி என்பதை ஓபிஎஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறார்… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Deputy CM OPanneer Selvam is lucky person says Rajinikanthநடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா தற்போது சென்னை, அடையாறில் நடைபெற்று வருகிறது.

இந்த மண்டபம் ரூ.2.80 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு வந்த ரஜினிக்கு ஓ.பி.எஸ் பொன்னாடை போர்த்தினார். கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தினார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது….

நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜிகணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி.

என்னை இந்த விழாவுக்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினருக்கு நன்றி.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி. அவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதை இங்கே மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைக்கும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

சிவாஜி ஒரு நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படவில்லை.

பல சுதந்திர போராட்ட வீரர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம்.

பல புராணக் கதைகளில் உள்ள கேரக்டர்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் என்பதால்தான் இந்த மணிமண்டபம்” என்று பேசினார்.

Deputy CM OPanneer Selvam is lucky person says Rajinikanth

 

More Articles
Follows