தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1990-களில் வெளியான ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்தில் நாயகனாக நடித்தவர் ரவி ராகுல்.
அதன் பின்னர் தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் ரவி ராகுல்.
இவர் தற்போது சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் ரவி ராகுலின் குரு வும் நடிகர் தனுஷ் செல்வராகனின் தந்தையுமான கஸ்தூரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் மேடையில் பேசும்போது…
“சின்ன பட்ஜெட் படங்களை மீடியாவும் மக்களும் ஆதரிக்க வேண்டும். என்னை பார்க்க நிறைய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்களின் கால்ஷீட் காக காத்திருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
ஒரு நடிகருக்கு காத்திருப்பதனால் பல மாதங்கள் பல ஆண்டுகள் ஓடிவிடும். அந்த நேரத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கலாம்.
கலைப்புலி தாணு எஸ் ஆர் பிரபு உள்ளிட்டோர் சின்ன படங்களை தயாரிக்க முன்வர வேண்டும்.
ரஜினி கமல் எல்லாம் ஒரு காலத்தில் புது முகங்கள் தானே. அது போலதானே தனுஷ் சிம்புவும்..
நினைத்தால் இனிக்கும் பட காலங்களில் ரஜினி கமல் புது முகங்கள் தானே.. துள்ளுவதோ இளமை காலத்தில் தனுஷ் புது முகம் தானே.” என பேசினார்.
பொதுவாக ரஜினி கமல் வரிசையில் பெயரை சொன்னால் அடுத்ததாக விஜய் அஜித் பேரை தான் பலரும் குறிப்பிடுவார்கள்.
ஆனால் ரஜினி கமல் பெயர்களை பலமுறை உச்சரித்தும் அஜித் விஜய் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
அதற்கு அடுத்து தனுஷ் சிம்பு பெயரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார் கஸ்தூரிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் ரவி ராகுல் இயக்குனராகிறார்.; சித்தார்த் நடிக்கிறார் https://www.filmistreet.com/cinema-news/aatha-un-kovilile-hero-ravi-rahul-turns-director/