தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 49வது நாளாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.
அப்போது அவர் ஒரு காரில் நின்று கொண்டு மைக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சிலர் ரசிகர்கள் கைதட்டியவாறு தலைவா, ஆண்டவரே, இங்கே பாருங்க என கூட்டலிட்டனர்.
இதனால் கடுப்பான கமல், சும்மா இருங்க. சும்மா இரு. இங்க் பேசிட்டு இருக்கே. விஷயம் தெரியாம விளையாட்டு பண்ணீட்டு இருங்கீங்க என்று கண்டிப்புடன் பேசினார்.
இந்த வீடியோ காட்சியை மட்டும் எடிட் செய்து பலர் இணையங்களில் பரப்பி வந்தனர்.
ஆனால் அதன்பின்னர், இது என் குடும்பம். அதனால் உரிமையுடன் கண்டிப்பேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.
அந்த வீடியோவை யாரும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal warning to his fans at Ban Sterlite protest