சபாஷ் நண்பர் ரஜினி; நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்

சபாஷ் நண்பர் ரஜினி; நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal talks about Rajinis stand on CAA and Delhi violence இன்று மாலை ரஜினி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது…

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று தான் கூறியிருந்தேன்.

உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு வன்முறையை ஒடுக்க வேண்டும். முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்.

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

மக்கள் என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன்.

சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பேசியிருந்தார் ரஜினி.

இந்த நிலையில், ரஜினியின் கருத்தை வரவேற்று கமல் தன் கருத்தை கூறியுள்ளார்.

அதில், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

Kamal talks about Rajinis stand on CAA and Delhi violence

வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்.; பாஜக.-வை தாக்கிய ரஜினி

வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்.; பாஜக.-வை தாக்கிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini slams CAA Delhi violence and BJP Central Govt சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தன் போயஸ் தோட்ட கார்டன் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில்…

டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம்.

ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும்நேரத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய அரசின் intelligence-ன் தோல்வி.. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம், வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது; போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

போராட்டம் எப்போதும் வன்முறையாக மாறக் கூடாது, அமைதியாக நடைபெறலாம்.

டெல்லியில் வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்.

சிஏஏ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகிவிட்டது.

குடியுரிமைச் சட்டத்தை இனி திரும்ப பெறுவது சாத்தியமில்லை.

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன்.

என்ன உண்மையோ அதை சொல்கிறேன்; என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.

நான் பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajini slams CAA Delhi violence and BJP Central Govt

பாசிச வெறி; கொடுமைப்படுத்தும் அரசாங்கம்… – ‘நறுவி’ விழாவில் ரஞ்சித் பேச்சு

பாசிச வெறி; கொடுமைப்படுத்தும் அரசாங்கம்… – ‘நறுவி’ விழாவில் ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pa Ranjith at Naruvi Audio Launch“ஒன் டே புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “நறுவி” திரைப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

இசை அமைப்பாளர் கிறிஸ்டி பேசியதாவது,

“இந்தப்படம் எனக்கு கிடைக்கக் காரணமே இயக்குநர் ரஞ்சித் தான். சினிமா எப்ப வேணும்னாலும் உன்னை மாத்தும் என்று ரஞ்சித் சொன்னார். அப்படியொரு மாற்றம் ரஞ்சித் மூலமாகத்தான் நடந்தது. இந்தப்படத்தில் என்னை கமிட் செய்த தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. அதேபோல் இயக்குநர் ராஜா முரளிதரனுக்கும் பெரிய நன்றி” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,

“பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப் படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குநர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன். நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன். இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும். இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்

கதைநாயகன் செல்லா பேசும்போது,

“இங்கு வந்து என்னைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. வசந்தபாலன் சாரின் வெயில் படம் பெரிதாக கவனிக்கப்பட்டதற்கு காரணம் பிரஸ். எனக்கும் மீடியா சப்போர்ட் பண்ணணும்னு கேட்டுக்கிறேன். இசை அமைப்பாளர் பற்றி நிறையச் சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் உழைத்துள்ளார். அவரின் பாடல்களை கேட்டதும் எனக்குள் ஒரு அதிர்வு கிடைத்தது. இந்தப்படம் வெற்றி பெற்றால் அதற்கான மொத்தப் பெருமையும் இசை அமைப்பாளருக்குத் தான். டேஞ்சர் மணியின் ரிஸ்க் எல்லாம் சண்டைக்காட்சிகளில் தெரியும்..கேமராமேன் மிகச்சிறந்த உழைப்பாளி. ரஞ்சித் அண்ணன் இந்தப் பங்ஷனுக்கு வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. என் கற்பனையை நிஜமாக்கியது என் அப்பா தான். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இயக்குநரும் நானும் ஒன்று தான். நாங்கள் வேறு வேறு கிடையாது” என்றார்

இயக்குநர் ராஜா முரளிதரன் பேசியதாவது,

“எனக்கு இது முதல் மேடை. கூட்டத்தில் எனக்குப் பேச வராது. உருவம் சாதி அந்த மாதிரி அடையாளங்களோடு தான் என்னைப் பலரும் பார்த்தார்கள். என்னை யாருமே நம்பவில்லை. அந்த வகையில் என்னை நம்பிய துரைராஜ் அப்பாவிற்கு நன்றி. அவர் எனக்கு இன்னொரு அப்பா. நானும் ஸ்டெல்லாவும் பிரண்ட். கோவையில் வேலைப் பார்த்து சென்னைக்கு வருவேன். பரணி ஸ்டெல்லா என்ற என் இரு உயிர் நண்பர்கள் தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடன் நின்ற அத்தனை பேருக்கும் நன்றி” என்றார்.

“சினம்” படப்பிடிப்பிற்காக 45 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு !

“சினம்” படப்பிடிப்பிற்காக 45 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijayஎதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது அருண் விஜய் நடிப்பில் வெளியான “மாஃபியா” திரைப்படம். ரசிகர்களின் வாய்மொழி பாராட்டு வழியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது “மாஃபியா”. தொடர் வெற்றிகளை தந்துவருவதோடு விழாக்காலமில்லாமல் சாதாரண நேரத்தில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற படமாக விநியோகஸ்தர்களாலும், விமர்சகர்களாலும் “மாஃபியா” கொண்டாப்படுவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளார் அருண் விஜய். “மாஃபியா” ஓடிய தியேட்டர்களில் கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் ரசிகர்களை நேரடியா சந்திக்க, அவர்கள் காட்டிய அளவிலா அன்பு, உற்சாக வரவேற்பில் மனதெங்கும் புத்துணர்வு பரவி, பெரு மகிழ்ச்சியில் மிதந்து வருகிறார் அருண் விஜய். தற்போது வெற்றியை கொண்டாடும் நேரமே இல்லாமல் அடுத்த அதிரடிக்கு “சினம்” படத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிக்கு தயாரகிவிட்டார் அருண் விஜய். இதில் குறிப்பிடதக்கது என்னவென்றால் இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக 45 லட்சம் செலவில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் GNR குமரவெலன் இது குறித்து கூறியதாவது…

இந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறக்கூடிய கதையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி பற்றி விவாதித்த போது இதனை நேரடியாக பொது இடத்தில் எடுப்பது இயலாத காரியம் என்பது தெரிந்தது. ஆதலால் இதனை அரங்கு அமைத்து எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் விஜயகுமார் இதற்கு ஒத்துக்கொள்வரா ? மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே !எனத் தோன்றியது. ஆனால் நானே எதிர்பாரா விதமாக “செலவு முக்கியமில்லை படத்தின் தரமே முக்கியம், காட்சி சரியாக திரையில் வரவேண்டும்” என அவர் சொன்னார். கலை இயக்குநர் மைக்கேல் மற்றும் அவரது குழு பிரமிப்பான உழைப்பில் தத்ரூபமாக , உண்மையான இடம் போலவே அரங்கை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வெகு அற்புதமாக வடிவமைத்துள்ளார். அருண் விஜய்யின் ஸ்டைலீஷ் தோற்றமும் பெரும் அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளிவெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

மார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kamalதர்பார் பட சமயத்தின் போதே ரஜினி – லோகேஷ் கனகராஜ் புதிய படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகின.

அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியனது.

இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இப்பட பூஜை போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தர லோக்கலாக இறங்கிய ரஜினி; தலைவர் 168 டைட்டில் இதான்

ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

இந்த படங்களை முடித்துவிட்டு ரஜினி & லோகேஷ் இருவரும் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 விபத்து எதிரொலி; இன்சூரன்ஸ் செய்த ‘மாநாடு’ படக்குழு

இந்தியன் 2 விபத்து எதிரொலி; இன்சூரன்ஸ் செய்த ‘மாநாடு’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu producerசில நாட்களுக்கு இந்தியன் 2 சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர்.

இந்த விபத்தில் ஷங்கர், கமல் நூலிழையில் உயிர் தப்பினர்.

இனிமேல் சினிமா தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்தன.

இதனை வெறும் பேச்சாக இல்லாமல் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது ‘மாநாடு’ படக்குழு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தன் பட தொழிலாளர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் பிரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows