தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக (மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை) மூடப்பட்டுள்ளன.
தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
கல்லூரிகளில் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இவை இரண்டையும் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளதாவது…
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்பிற்கு திறன்பேசி வாங்க வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக, “ஹெல்ப் சென்னை” அமைப்பைத் தொடங்கி பயன்படுத்தப்பட்ட திறன்பேசிகளை தானமாகப் பெற்று 400 மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய அர்ஷிதா அகர்வால், குனிஷா அகர்வால் இருவரையும் பாராட்டுகிறேன்.
ஆன்லைன் வகுப்பிற்கு திறன்பேசி வாங்க வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக, "ஹெல்ப் சென்னை" அமைப்பைத் தொடங்கி பயன்படுத்தப்பட்ட திறன்பேசிகளை தானமாகப் பெற்று 400 மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய அர்ஷிதா அகர்வால், குனிஷா அகர்வால் இருவரையும் பாராட்டுகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 9, 2020
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 9, 2020
Kamal praises helpline social activists, Arshitha Aggarwal and Kunisha Aggarwal