நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கமல் இரங்கல்

நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் டோலிவுட் நடிகரும், முன்னாள் எம்பியுமான கைகலா சத்யநாராயணா.

தமிழ், தெலுங்கு என 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ரெட்டியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் இல்லத்தில் நேற்று காலமானார்.

கைகலா சத்யநாராயணா மறைவுக்கு தனது இரங்கலை ட்விட்டர் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன் தமிழில் பதிவிட்டுள்ளார்,

‘பஞ்சதந்திரம்’ படத்தில் நீங்கள் பார்த்த கைகல சத்திய நாராயணா அவர்கள், 63 ஆண்டுகளாக சினிமாவைப் பிரியாதவர்.பல விதமான பாத்திரங்களை நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர். காலம் ஆகியிருக்கிறார். “அவருக்கென் மனப்பூர்வ அஞ்சலி” என கூறினார்.

kamal haasan mourns the demise of Kaikala Satyanarayana

விஜய் – விஷ்ணு விஷால் ஆகியோருடன் நடித்த ‘மாயி’ சுந்தர் காலமானார்

விஜய் – விஷ்ணு விஷால் ஆகியோருடன் நடித்த ‘மாயி’ சுந்தர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45′ மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்! அவருக்கு வயது 50. திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்திலும் மாயி சுந்தர் நடித்துள்ளார். இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Actor Maayi Sundar passed away

JUST IN 3 மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்.; வீடியோவை வெளியிட்ட படக்குழு

JUST IN 3 மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்.; வீடியோவை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் சுனைனா மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘லத்தி’.

வினோத்குமார் இயக்கிய இந்த படம் நேற்று டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

மிகவும் யதார்த்தமாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் நடித்துள்ள விஷாலின் நடிப்பை ரசிகர்களும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் வில்லனாக நடித்த ரமணாவின் நடிப்பு படு மிரட்டலாக இருந்தது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சற்று முன் விஷால் 3 மொழிகளில் டப்பிங் பேசியுள்ள வீடியோ காட்சிகளை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் விஷால் பேசியுள்ளார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது.

இதற்காக விஷால் தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று பிரமோஷன் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Vishal sensational dubbing in 3 Languages for Laththi

#Laatti
#LaththiCharge

@VishalKOfficial @TheSunainaa @nandaa_actor @RanaProduction0

அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம்.; ‘சர்க்கார்’ அரசியல்வாதியுடன் விஜய் ஆலோசனை

அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம்.; ‘சர்க்கார்’ அரசியல்வாதியுடன் விஜய் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மகன் நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலில் நுழைய வைத்து அவரை தமிழ்நாட்டின் முதல்வராக்கி விட வேண்டும் என்ற சிந்தனையிலே பணியாற்றி வந்தார் எஸ்ஏ சந்திரசேகர்.

அதன்படியே 90களிலேயே விஜய் மக்கள் இயக்கத்தை அறிவித்தார்.

மேலும் அடிக்கடி விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவ்வப்போது மறைமுகமாக பேசி வருவார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கமும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறது.

இது தொடர்பாக அடிக்கடி நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் ரீதியான கட்சியாக தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக பழம்பெரும் அரசியல் பிரமுகர் பழ.கருப்பையாவை விஜய் ஆலோசனை செய்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் அவரை எதிர்க்கும் அரசியல்வாதியாக பழ.கருப்பையா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Makkal Iyakkam  as a political party.; Vijay consults with ‘Sarkar’ politician

விஜயகுமார் எப்படி இருக்கிறார்? அப்பா உடல் நலம் குறித்து அருண் விஜய் பதிவு

விஜயகுமார் எப்படி இருக்கிறார்? அப்பா உடல் நலம் குறித்து அருண் விஜய் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பம் என்று சொன்னால் அது நிச்சயம் விஜயகுமார் குடும்பத்திற்கு 100% பொருந்தும்.

கருப்பு வெள்ளை காலந்தொட்டு இன்று வரை சினிமாவில் இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கும் விஜயகுமார் குறித்து சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில் தன் தந்தையின் உடல் நலம் குறித்து அருண் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளத்தை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“அப்பா நலமாக வீட்டில் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். நண்பர்கள் உறவினர்கள் ரசிகர்களின் அன்புக்கு நன்றி.. உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை” என பதிவிட்டுள்ளார்.

Arun Vijay clarifies on Vijayakumar’s health

‘கனெக்ட்’ படத்தை கண்டுக்காத ரசிகர்கள்.; கடுப்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

‘கனெக்ட்’ படத்தை கண்டுக்காத ரசிகர்கள்.; கடுப்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 22ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் உருவான ‘கனெக்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

வெறும் 99 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படத்தை விக்னேஷ் சிவன் தன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இதில் சத்யராஜ் வினய் அனுபம்கேர் உள்ளிட்ட 5 நட்சத்திரங்கள் மட்டுமே நடித்திருந்தனர்.

அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன.

கொரோனா லாக்டவுன் காலத்தை மையப்படுத்தி அதில் பேயை கனெக்ட் செய்து இருந்தார் இயக்குனர்.

இந்த படத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டாலும் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செம கடுப்பில் உள்ளனர்.

மேலும் ஒரு திரைப்படத்தின் மீது வன்மத்தை தெளிக்காதீர்கள் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து ஒரு படத்தை விமர்சனம் செய்தால் எப்படி வன்மம் ஆகும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More Articles
Follows