தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் அரியலூரில் நீட் அச்சம் காரணமாக விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தால் என்ன செய்வது? என்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர் தற்கொலைகள் மாணவர்கள் & பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்…
“மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?” என்றார்.
மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை..” என தெரிவித்துள்ளார்.
வைரமுத்து கூறியுள்ளதாவது…
ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!
நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.
பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.
அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.
நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.
#NEET #BanNEET
kamal haasan and vairamuthu tweets on NEET