தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பன்முக திறமைக் கொண்ட கமல்ஹாசன் தமிழ் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இனி இல்லை என கூறமுடியாது என்று கருத்தை தெரிவித்திருந்தார்.
அதில் இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி இந்துக்கள் விட முடியாது எனவும் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.
இதற்கு இந்துக்கள் அமைப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கமல்ஹாசன் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவுசெய்து உள்ளனர்.
அவர் மீது இந்திய தண்டனைச் அட்டப்படி 500, 511, 298, 295(ஏ) & 505(சி) ஆகியபிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது போல் வாரனாசி முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இந்து மதத்தை புண்படும் வகையில் பேசிய கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு விசாரணைக்கு வரவே, விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது வாரணாசி நீதிமன்றம்.
Kamal court case on Uttar Pradesh news updates