பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் !

பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Asura kadhalமிக அழகான முறையில் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால். பல வித பின்னணியில் பெண்களுக்கெதிராக இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையை கூறுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை திரு TK உருவாக்கியுள்ளார்.

வீடியோ பாடலை இயக்கிய இயக்குநர் திரு TK இது குறித்து கூறியதாவது…

எங்கள் மொத்த குழு சார்பாக இப்பாடலின் தன்மையை புரிந்துகொண்டு, எங்களை பாராட்டி, வெளியிட்டமைக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு நன்றி. இப்பாடலை வெளியிட சரியானவர் அவர் என்பது எங்கள் மொத்த குழுவின் கருத்து. சினிமாவிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி, பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக, எப்போதும் குரல் கொடுத்து வருபவர் அவர். அவர் எங்கள் பாடலை வெளியிட்டது எங்கள் அனைவருக்கும் பெருமை.

சிங்கப்பூரை சார்ந்த one clan நிறுவனத்தார் இந்த மியூசிகல் வீடியோவை தயாரித்துள்ளார்கள். திரு TK, தர்மேனிசம் இணைந்து இப்பாடலை உருவாக்கி, பாடியுள்ளார்கள். ( Diyo )தியோ இசையமைக்க ராப்பர்ஸ் – சோக்கோ (choco), B மற்றும் ஸ்பைஸ் ( spice ) பாடலுக்கு வலிமை கூட்டியுள்ளார்கள்.

இந்த ஐந்து நிமிட பாடல் வீடியோவை இயக்கியுள்ளார் திரு TK. லெவின் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு JK சரவணா, குட்டி குமார் மற்றும் சிதம்பரம் S செய்துள்ளனர். JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள்.

சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும்
இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள்.

Link : https://youtu.be/7_GqRZMpNTI

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா!

அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Nandhaவெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது…

இப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன். நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் குழுமம் படத்தில் இணைந்திருக்கிறது. அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்றார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.

தமிழக அரசை தட்டி கொடுத்து கோரிக்கை வைத்த ரஜினி

தமிழக அரசை தட்டி கொடுத்து கோரிக்கை வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini request to TN Govt regarding Corono virus issueகொரோனா… இந்த பெயரை கேட்டால் உலகமே அதிரும் என்ற வகையில் இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்று நோயினால் உலகமே ஸ்தம்பித்துள்ள எனலாம்.

மார்ச் 31ஆம் தேதி சகஜ நிலைமைக்கு திரும்பாமல் வீட்டுக்குள்ளே மக்களை இருக்க இந்திய அரசு வற்புறுத்தியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரானா குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி மக்கள் நலனை காக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா குறித்து ரஜினி கூறியுள்ளதாவது… ‛‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்”.

என ரஜினி தெரிவித்துள்ளார்.

Rajini request to TN Govt regarding Corono virus issue

விஜய்-அஜித்-விக்ரம் ஏற்ற வேடத்தை முதன்முறையாக ஏற்கும் சூர்யா

விஜய்-அஜித்-விக்ரம் ஏற்ற வேடத்தை முதன்முறையாக ஏற்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya as advocate in new movieசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற ஒரு படம், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதனிடையில் கௌரவ தோற்றத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா.

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறாராம்.

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் பழங்குடியினரின் கோரிக்கைக்காக போராடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாராம்.

இதற்கு முன் தமிழன் படத்தில் விஜய், அந்நியன் படத்தில் விக்ரம், நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் ஆகியோர் வக்கீலாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya as advocate in new movie

தன் 2வது குழந்தைக்கு அழகான பெயர் வைத்த இயக்குனர் ரஞ்சித்

தன் 2வது குழந்தைக்கு அழகான பெயர் வைத்த இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith and wife Anitha blessed with a baby boy named Miliranரஜினி நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் பா. ரஞ்சித்.

தற்போது ஆர்யா நடிக்கும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்து பெரிய பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அக்குழந்தைக்கு மிளிரன் என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளனர்.

Ranjith and wife Anitha blessed with a baby boy named Miliran

தல அஜித் படத்திற்காக புல்லட் ஓட்டும் காலா ஹீரோயின்

தல அஜித் படத்திற்காக புல்லட் ஓட்டும் காலா ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Huma Qureshi to perform bike stunts in Valimaiபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

கொரோனா பீதி காரணமாக நாட்டில் உள்ள எல்லா பட சூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் வலிமை படமும் அடங்கும்.

இந்த படத்தில் அஜித்தின் நாயகியாக ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.

இவர் காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஹூமா குரேஷி, புல்லட் ஓட்டும் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்துடன் உங்கள் பயத்தை மீறுவதிலும் என் பதிவிட்டுள்ளார்.

Huma Qureshi to perform bike stunts in Valimai

More Articles
Follows