முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசைப்பட்ட ஜோதிகா

முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசைப்பட்ட ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothikaவித்யா பாலன் நடிப்பில் இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, மூன்று நாட்களில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமாவையே திகழ்ப்பில் ஆழ்த்தியது.

லக்‌ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, சிம்பு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் கோ.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம்குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம், வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. டிக்கெட் ரிசர்வேசன் நாளை (நவ.15) தொடங்குகிறது.

இந்நிலையில், ஹெலோ எப்.எம்-க்கு ஜோதிகா அளித்திருக்கும் பேட்டியில் படம் குறித்து பேசியதோடு, தனது திருமண வாழ்க்கை, கணவர் சூர்யா, தனது ரீ எண்ட்ரி குறித்தும் பேசியிருக்கிறார்.

அப்போது, ஜோதிகாவிடம் “நிருபராக நீங்கள் யாரை பேட்டி எடுக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “மறைந்த முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசை” என்று பதில் அளித்தவர், தற்போது அது சாத்தியமில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘காற்றின் மொழி’ படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பதோடு, பாடல் பாடியதோடு, மிமிக்ரியும் செய்திருக்கிறாராம்.

கணவன் – மனைவி பந்தத்தைப் பற்றியும் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் அதே சமயம் பெறியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ அனைவரையும் கவரும் மொழியாக இருக்கும் என்றும் ஜோதிகா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

காஜல் அகர்வாலை கட்டிபிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்

காஜல் அகர்வாலை கட்டிபிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal aggarwalபெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்’.

இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

எனவே பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

காஜல் அகர்வால் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் அவர் பேசினார்.

அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை அணைத்து முத்தமொன்று கொடுத்தார்

இதனையடுத்து காஜல் அகர்வால் செய்வது அறியாது ஒருவழியாக சமாளித்தார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் காஜல் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ஒளிப்பதிவாளரை விமர்சித்து வருகின்றனர்.

வடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்

வடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennaiவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் வடசென்னை.

இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இது 3 பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் மட்டும் வெளியாகிவிட்டது.

இப்படத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளை படத்தில் வடசென்னை மக்கள் பேசுவதாக காட்டியிருந்தார் டைரக்டர்.

மேலும் வடசென்னை என்றாலே அசிங்கம், கொலை, குற்றம் ஆகியவற்றை பிரதானமாக காட்டியிருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார்.

அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள்.

இரவு நேரத்தில், ’வடசென்னைக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள். எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள்.

போதும். முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்கள்” என்றார்.

எஸ்டிஆருக்கு ரெட் கார்ட்.? விஷாலை கண்டிக்கும் சிம்பு ரசிகர்கள்

எஸ்டிஆருக்கு ரெட் கார்ட்.? விஷாலை கண்டிக்கும் சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu fans condemns Vishal and Producer Michael Rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே மட்டுமே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த தயாரிப்பாளர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கமும் கேட்டது. அவரது படங்களுக்கு தடையும் போட்டது.

தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

ஆனால் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது.

பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் அவர்கள் சிம்புவுக்கு ஆதரவாக பேசி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Simbu fans condemns Vishal and Producer Michael Rayappan

மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்

மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and vishnuசுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் விஷ்ணு விஷால்,

அண்மையில் இவர் நடித்த ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவருக்கும், நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவருக்கும், கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

வழக்கமான கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணு டுவிட்டரில் கூறியிருப்பதாவது : நானும், ரஜினியும் ஓர் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். தற்போது எங்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

எங்களது மகனுக்கு ஒரு நல்ல பெற்றோராக இருந்து, அவனுக்கு எல்லாவற்றையும் செய்தோம், இனியும் செய்வோம். பல ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், இனி நல்ல நண்பர்களாக இருப்போம்.

எங்களது மகன் மற்றும் இருவரது குடும்பங்களின் நலன் கருதி எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.?

ஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 222 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இந்தியன் 2 படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, முத்துராஜ் கலை பணிகளை கவனித்து வருகிறார்.

இதன் செட் அமைக்கும் பணிகளை நேற்று முதல் பூஜையுடன் படக்குழு துவங்கியது.

அடுத்த டிசம்பர் முதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் இல்லை)

இதுபற்றி கேட்டதற்கு… கமல் கேரக்டர் மற்றும் உறுதியாகியுள்ளது. துல்கர் மற்றும் சிம்பு உள்ளிட்டோரை யாரும் அனுகவில்லை. என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சூட்டிங் தொடங்கும் முன் மற்ற கலைஞர்கள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 2

More Articles
Follows