முதன்முறையாக ஜெயம் ரவியுடன் டூயட் பாட ரெடியாகும் பிரியா பவானி சங்கர்

முதன்முறையாக ஜெயம் ரவியுடன் டூயட் பாட ரெடியாகும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

(பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் குறுகிய கால படப்பிடிப்பில் நடிக்க விரும்புகிறாராம் ரவி)

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ஜூலையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது உறுதியானால் ஜெயம் ரவி – ப்ரியா பவானி சங்கர் இணையும் முதல் படமாக இது அமையும் என எதிர்ப்பார்க்கலாம்.

Jayam Ravi to romance Priya Bhavani Shankar

மீண்டும் இணையும் ஹாட்ரிக் கூட்டணி.; தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் இவர்கள் தான்

மீண்டும் இணையும் ஹாட்ரிக் கூட்டணி.; தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் இவர்கள் தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இவை மூன்றும் ஹாட்ரிக் ஹிட் படங்களாக அமைந்தன.

தற்போது மீண்டும் தனுஷுடன் மீண்டும் இணைய உள்ளார் மித்ரன் ஜவஹர்.

இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

கடந்த 5-6 ஆண்டுகளாக அனிருத்தும் தனுஷும் இணைந்து பணிபுரியவில்லை.

இந்த நிலையில், இதில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் – ஹன்சிகா ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தனர்.

Dhanush to act in this hit director direction?

ஷங்கரை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சாயும் லிங்குசாமி.; ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி

ஷங்கரை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சாயும் லிங்குசாமி.; ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lingusamyதமிழ் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய கோலிவுட் இயக்குனர்கள் தற்போது தெலுங்கு படங்களை இயக்க ஆயுத்தமாகி வருகின்றனர்.

விரைவில் ராம் சரண் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இவரைத் தொடர்ந்து ஏஆர். முருகதாஸும் தெலுங்கு ஹீரோவை இயக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் கமர்ஷியல் வெற்றிப் படங்களை இயக்கிய லிங்குசாமியும் தெலுங்கில் படத்தை இயக்கவுள்ளார்.

இதில் தெலுங்கு நடிகரான ராம்பொத்தேனி நடிக்க ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி இணைந்திருக்கிறார்.

இவர்கள் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 முதல் தொடங்கவுள்ளது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகுகிறது.

Lingusamy to direct telugu film with krithi shetty

‘KGF 2’ படத்துடன் கை கோர்க்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘KGF 2’ படத்துடன் கை கோர்க்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF 2பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத் திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’.

இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது.

இப்படத்தின் மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களை அதிரச் செய்தன.

இதனால் ‘கேஜிஎஃப்’-ன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ல் ஹீரோ யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் படங்களுக்குதான் இந்தியா முழுமைக்கும் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால், இதனை மாற்றிக்காட்டிய முதல் தென்னிந்திய படம் ‘பாகுபலி’.

இப்படத்திற்குப் பிறகு மீண்டும் அதே போன்றதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘கேஜிஎஃப்: சேப்டர்2’.

ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தில் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

. @DreamWarriorpic ‘s to release India’s most expected film #KGFChapter2 in Tamil Nadu starring @TheNameIsYash @duttsanjay @prakashraaj ! #KGF2Teaser was an record breaking already. After Baahubali another non Bollywood film gets more expectation.

DreamWarriorpic’s to release India’s most expected film #KGFChapter2 in Tamil Nadu

‘தலைவர் 170’ படத்தை இயக்கி தயாரிக்கும் ரஜினிகாந்த் குடும்பம்

‘தலைவர் 170’ படத்தை இயக்கி தயாரிக்கும் ரஜினிகாந்த் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

முதன் முறையாக ரஜினி படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முதன் முறையாக ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.

இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர்.

இந்த நிலையில் ‘தலைவர் 169’ படத்தை முடித்துவிட்டு ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்த படத்தை ரஜினி மகள்களான ஐஸ்வர்யா & சௌந்தர்யா தயாரிக்கிறார்களாம்.

ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் ஏற்கெனவே ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதன் பிறகு படத்தை இயக்காமல் தன் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.

தற்போது தன் மாமனார் ரஜினிக்காக மீண்டும் படம் இயக்க வருகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivar 170 project details here

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்திற்காக தேசிங்கு – ஏஜிஎஸ் கூட்டணி..?

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்திற்காக தேசிங்கு – ஏஜிஎஸ் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalaivar 169அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு முழுக்கு போட்டவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

அரசியலுக்கு வராத காரணத்தினால் சினமாவில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முதன் முறையாக ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.

இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை கொரோனா ஊரடங்கு சமயத்தில் பார்த்த ரஜினி,தேசிங்கு பெரியசாமியைப் பாராட்டி தனக்கும் ஒரு கதை ரெடி பண்ண சொல்லியிருந்தார்.

அப்போது ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த (2020) காலக்கட்டம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ‘தலைவர் 169’ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Thalaivar 169 project details here

More Articles
Follows