விஜய்-ஜெயம் ரவி-சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் ஆர்யா

விஜய்-ஜெயம் ரவி-சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aryaதமிழ் சினிமாவில் எப்போதும் பாக்ஸர் கேரக்டர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

விஜய் நடித்த பத்ரி, ஜெயம் ரவி நடித்த பூலோகம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே ஆகிய படங்களை இந்த வரிசையில் சொல்லலாம்.

தற்போது இந்த வரிசையில் இணைய வருகிறார் ஆர்யா.

அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தில் பாக்ஸர் ஆக நடிக்கவிருக்கிறாராம்.

இப்படம் வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது-

நயன்தாரா நடித்த அறம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் எடுப்பார் என கூறப்பட்ட நிலையில் இவர் ஆர்யாவை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகர் நடிகைகள் குறித்தும், பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறி படத்தில் மீனா மகள்; சர்கார் படத்தில் ரஜினி பேத்தி

தெறி படத்தில் மீனா மகள்; சர்கார் படத்தில் ரஜினி பேத்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkarரஜினிக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஆண் குழந்தைகளே. அப்படியிருக்கையில் எப்படி பேத்தி என நினைக்கிறீர்களா..?

இது நிஜப் பேத்தி அல்ல. காலா படத்தில் ரஜினியின் பேத்தியாக நடித்த பேபி மீனலோச்சனி பற்றிய செய்தி.

இவர் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடிக்கிறாராம்.

ஏற்கெனவே தெறி படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்யுடன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்க முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பட வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி செய்த பவர்ஸ்டார் மீது வழக்கு

பட வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி செய்த பவர்ஸ்டார் மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN police registered FIR for cash scam filed against actor Power Star Srinivasanசென்னை, புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்துறையில் புகார் மனுவொன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது…

நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்தேன். அப்போது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருமாறு கேட்டேன். அதற்கு அவர் வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்தார்.

மேலும் அவரை நம்பி ரூ. 4.16 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர் இதுவரை எனக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தரவில்லை.

அவரை நேரில் பார்க்கச் சென்றால் பார்க்க முடிவதில்லை. என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் மோசடி செய்துவிட்டார்.

எனவே இதுகுறித்து போலீசார் விசாரித்து பவர் ஸ்டார் சீனிவாசனிடமிருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது எப்ஐஆர் / முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

TN police registered FIR for cash scam filed against actor Power Star Srinivasan

பாய் பிரண்ட் உடன் அந்தமானில் ஊர் சுற்றும் ஜூலி

பாய் பிரண்ட் உடன் அந்தமானில் ஊர் சுற்றும் ஜூலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

julieஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் ஆகியவற்றின் முமூலம் பிரபலமானார் ஜூலி.

இவர் தற்போது டிவி தொகுப்பாளராகவும், சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன் பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் போட்ட ஜூலி, `தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, உங்களது ஆசீர்வாங்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

பிறந்தநாளை அந்தமானில் எனது நண்பர் மார்க் ஹம்ரானுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடினேன்’. என்றும் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஜூலியும், சென்னையை சேர்ந்த மாடலான மார்க் ஹர்மானும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

மோகன்லால்-நிவின் பாலி நடித்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம்

மோகன்லால்-நிவின் பாலி நடித்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhan karkyநிவின் பாலி நடித்துள்ள ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு வசனம் எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் தற்போது இயக்கியிருக்கும் மலையாளப் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.

தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாதவர்களிடம் கொடுக்கும் ஒருவரைப் பற்றிய கதை இது.

இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

தமிழில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் தமிழ்நாட்டிலும் வெளியாக இருக்கிறது. தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

ஏற்கெனவே, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்களுக்கான தமிழ் வசனங்களையும் மதன் கார்க்கி தான் எழுதினார். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார்.

1800-ம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.

“இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும், மையக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே, தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம்.

இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் மொழிமாற்றுப் படத்தைப் பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்கிறார் மதன் கார்க்கி.

வெட்கமில்லை என லதாரஜினியை விமர்சித்த ராமதாஸ்; ரஜினியை சீண்டுகிறாரா?

வெட்கமில்லை என லதாரஜினியை விமர்சித்த ராமதாஸ்; ரஜினியை சீண்டுகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK Ramadoss criticize Latha Rajinikanth in Kochadaiiyaan Court issueகோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் நிறுவனம், ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ. 10 கோடி கடன் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மொத்த கடன் தொகையில் ரூ. 6.20 கோடியை திருப்பிச் செலுத்தாமல் லதா ரஜினிகாந்த் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், ரூ. 80 லட்சம் பாக்கி மட்டுமே உள்ளதாக லதா ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடனை திரும்பச் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் அவகாசம் கொடுத்திருந்தது.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர். மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பெங்களூரு நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இவ்விவகாரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பதை நம் தளத்தில் நேற்று படித்தோம்.

இந்நிலையில் இன்று இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, வெட்கமில்லை…இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2 முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாக கூறிவிட்டு இப்போது மறுப்பதை ஏற்கமுடியாது.

இதுகுறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பாபா படத்தின் ரிலீஸின் போது ரஜினிக்கும் பாமகா.வுக்கும் ஏற்பட்ட பிரச்சினை இந்த தமிழகம் அறிந்ததே.

தற்போது மீண்டும் ரஜினி விவகாரத்தில் ராமதாஸ் நுழைந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

Dr S RAMADOSS‏ @drramadoss
வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை! கோச்சடையான் படத்திற்காக லதாரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாக கூறிவிட்டு இப்போது மறுப்பதை ஏற்கமுடியாது. இதுகுறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆவேண்டும். -உச்சநீதிமன்ற நீதிபதிகள்

PMK Ramadoss criticize Latha Rajinikanth in Kochadaiiyaan Court issue

More Articles
Follows