தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் எப்போதும் பாக்ஸர் கேரக்டர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
விஜய் நடித்த பத்ரி, ஜெயம் ரவி நடித்த பூலோகம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே ஆகிய படங்களை இந்த வரிசையில் சொல்லலாம்.
தற்போது இந்த வரிசையில் இணைய வருகிறார் ஆர்யா.
அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தில் பாக்ஸர் ஆக நடிக்கவிருக்கிறாராம்.
இப்படம் வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது-
நயன்தாரா நடித்த அறம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் எடுப்பார் என கூறப்பட்ட நிலையில் இவர் ஆர்யாவை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகர் நடிகைகள் குறித்தும், பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.