தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’.
டைரக்டர் ஷங்கர் தயாரித்த இப்படத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்தார்.
தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தை இந்த கூட்டணியே பணியாற்ற முடிவு செய்தது.
இதன் சூட்டிங்குங்காக பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகளும் உருவாக்கப்பட்டன.
ஆனால் சில நாட்களிலேயே வடிவேலு பிரச்சினை செய்ய சூட்டிங் நிறுத்தப்பட்டது.
இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷங்கர்.
சங்க நிர்வாகிகள் சமாதானம் செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் தான் இந்த சமாதானத்தை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
எனவே விரைவில் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
Imsai Arasan 24th Pulikecei will commence again soon