பிரசாத் ஸ்டூடியோ இழைத்த அநீதியை வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசுகள்..; விருதுகளை திருப்பி கொடுக்க இளையராஜா முடிவு.. – தினா

பிரசாத் ஸ்டூடியோ இழைத்த அநீதியை வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசுகள்..; விருதுகளை திருப்பி கொடுக்க இளையராஜா முடிவு.. – தினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayarajaஇன்று ஜனவரி 18ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா.

அவர் அப்போது பேசியதாவது…

“இசை கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றிஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம் பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜாவழக்கு தொடர்ந்திருக்கிறார் என்கிற ஊடகங்களில் வருகிற செய்திகள் தவறானவை கோடம்பாக்கம், வடபழனி, சாலிக்கிராமம் என்பது சினிமாகாரர்கள் மட்டுமே இருந்து வந்த இடம்.

அன்றைக்கு இருந்த பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை அவற்றை பராமரித்து பாதுகாக்க தவறிவிட்டோம்.. அனைத்தும் வணிகரீதியிலான கட்டிடங்களாக மாறிவிட்டன.

கடந்த 45 ஆண்டு காலாமாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ பிரசாத் ஸ்டுடியோ முதல் நாள் மாலை ரிக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் காலை வழக்கம்போல சென்றவரை உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்..

இது எட்டு மாத காலமாக நீடித்தது அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை நாடினார்.

நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகாலமாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதாரப்படுத்தபட்டிருந்தன.

மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன..

45 ஆண்டுகாலம் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணியை செய்தவரை காலி செய்யுங்கள் என்பதை பிரசாத் நிர்வாகம் உரிய கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்..

தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இசை கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்கு தகவல் கூறி இருக்கலாம்..

இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இசைஞானி இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய மாநில அரசுகள் மௌனமாக வேடிக்கை பார்த்தது..

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் புரட்சிதலைவி அம்மா அவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை இசைஞானிக்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் தற்போது பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக உணர்கிறோம்..

ஐம்பாதாண்டு காலம் இந்திய சினிமாவுக்கு தன் இசை பணியால் சர்வதேச அளவில் கௌரவத்தை பெற்று தந்த இசைஞானி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தன்னை கௌரவப்படுத்தி வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் இருக்கிறார் இளையராஜா.

இவ்வாறு இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

Ilayaraja’s new desicion on Prasad Studio issue

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ‘மறைந்த யோகேஸ்வரன்’ நினைவாக தங்க காசு வழங்கும் லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ‘மறைந்த யோகேஸ்வரன்’ நினைவாக தங்க காசு வழங்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.

போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன்.

அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

#Jallikattu2021 #ServiceIsGod

– ராகவா லாரன்ஸ்

Raghava Lawrence announced Gold Coin to Jalli kattu winners

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்.!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் திரு அமீர் அவர்களின் நடிப்பில் உருவாகும் ‘நாற்காலி’ திரைப்படத்தின் பாடலான “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” என்ற எம்.ஜி.ஆரின் முதல் தனிப்பாடல் ஒலி குறுந்தகட்டினை வெளியிட மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

Naarkaali – MGR Song | Ameer | SPB | Vidyasagar | V Z Dhorai | Moon Pictures

Song Link: https://youtu.be/Xj9aju_o7IE

MGR song from Naarkali film released by CM Edappadi Palanisamy

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக தமன்னா..?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக தமன்னா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

சத்யஜோதி தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்திற்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

அதில் ஒரு நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இதற்கு முன்பே படிக்காதவன், வேங்கை படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Tamannah team up for Naane Varuven

பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’..; கமலுக்கு பிறகு விஜய் சேதுபதியின் வித்தியாச முயற்சி!

பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’..; கமலுக்கு பிறகு விஜய் சேதுபதியின் வித்தியாச முயற்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gandhi Talksதமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது.

இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை ‘காந்தி டாக்ஸ்’ மூலம் நனவாக்கியது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம்.

இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், “இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர் தான்.

தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.

ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.

அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோட பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சில முன்னணி பாலிவுட் படைப்புகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படம், சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைக்கர்’, ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகு வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் ‘காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.

Actor Vijay Sethupathi’s next is a Pan Indian film titled GANDHI TALKS

பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி..; பரிசு தொகை எவ்வளவு? ரன்னர்கள் யார்.? கமல் கொடுத்த கிப்ஃட் என்ன.?

பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி..; பரிசு தொகை எவ்வளவு? ரன்னர்கள் யார்.? கமல் கொடுத்த கிப்ஃட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று ஜனவரி 17ஆம் தேதி 105வது நாட்களை அதாவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

இன்று வெகு விமரிசையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த ஐவரில் 5வது இடம் பெற்றார் சோம் சேகர்.

எனவே முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை கடந்த முறை வின்னரான முகின் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார்.

அடுத்ததாக 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியேறினார்.

அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார் கவின்.

இதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் நடிகை ஷெரின்.

இவர் 3வது இடம் பெற்ற ரியோவை, (ரன்னர்2) பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றினார்.

அதிக ஓட்டுக்கள் பெற்ற ஆரியை, ‘பிக்பாஸ் சீசன் 4’ டைட்டில் வின்னராக கமல்ஹாசன் அறிவித்தார். அவருக்கு 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளது என அறிவித்தனர்.

ஆரிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த போட்டியாளர்களில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரி தான் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் பின்னர் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவருக்கு 6 கோடியே 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.

மேலும் பிக்பாஸ் பைனல் போட்டியாளர்களுக்கு தன் சார்பாக கிப்ஃட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

அதன் விவரம்….

KamalHaasan gives gifts to finalists

To Rio – Tent
To Bala – dumbbell
To Ramya – Organic seeds
To Aari – Pen & diary
To Som – Cojon (Drum)

Aari Arjunan won Bigg Boss Season 4 Title Winner

More Articles
Follows