தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா பாடல்களை கேட்பதை விட அண்மை காலமாக அவரது பாடல் ராயல்ட்டி மற்றும் அவரது சர்ச்சை பேச்சுகளையே அதிகம் கேட்டு வருகிறோம்.
இதனிடையில் இளையராஜா அனுமதியின்றி, அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம், என, அந்த சங்கத் தலைவர், தீனா கூறியிருந்தார்.
தன் பாடலுக்கான, ராயல்டி என்ற காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு, இளையராஜா வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் தீனா அளித்த பேட்டியில்…: எங்கள் சங்கத்தை அணுகினால், அனுமதி மற்றும் கட்டண நடைமுறைகளை பின்பற்ற வழிகாட்டுவோம்.
முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் கட்டணமாக இருந்தது. அது, மிகவும் அதிகம் என, பலரும் கூறியதால், கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் தரப்படும்.” என தெரிவித்துள்ளார்.
Ilayaraja has Exclusive Rights Over His Compositions Charge updates