தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில வருடங்களாகவே ரஜினியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி 12 வருடங்களுக்கு பிறகு இன்றுமுதல் (மே 15, 2017) 5 நாட்களை வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார்.
இதற்கான நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தற்போது பேசி வருகிறார்.
அவர் பேசியதாவது…
முன்பெல்லாம் படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களாகிய உங்களை சந்திப்பேன்.
அண்மைகாலமாக அது முடியாமல் போய்விட்டது. கோச்சடையான் படம் சரியாக போகவில்லை.
கபாலி படம் நன்றாக ஓடியது. ஆனால் சில காரணங்களால், வெற்றி விழா நடத்த கூடிய சூழ்நிலை அப்போது இல்லை.
2.0 டப்பிங் பணிகள் தற்போது நடக்கிறது. வருகிற மே 28ஆம் தேதி அடுத்த படத்தின் சூட்டிங் தொடங்குகிறது.
சில நாட்களுக்கு முன்பு உங்களை சந்திக்கவிருந்தேன். அதன்பின் அது ரத்தானது.
அதன்பின்னர் இலங்கை பயணம் ரத்தானது.
உடனே ரஜினிகாந்த் எப்போதும் இப்படிதான். எந்தவொரு முடிவையும் சரியாக எடுக்க மாட்டார். மனசை மாத்திக்கிட்டே இருப்பார். பின் வாங்குவார். பயப்படுவார் என்றார்கள்.
நான் ஒரு விஷயத்தை முடிவு செய்ய நிறைய யோசிப்பேன். முடிவு எடுத்த பிறகு சில பிரச்சினைகள் வரலாம்.
ஒரு குளத்தில் காலை வைத்துவிட்டேன். அதன்பின்னர்தான் அங்கு முதலைகள் உள்ளது என்று தெரிய வந்தது.
அதற்காக முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று முரட்டு தைரியம் அங்கே கூடாது.
வைத்த காலை அந்த குளத்தில் இருந்து எடுக்கத்தான் வேண்டும்.
நம்மள பத்தி பேசுறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க” என்றார்.
I will keep my steps backward only on critical situations says Rajinikanth in Fans meeting