தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிறுவப்பட்டு இருந்த எம்ஜிஆர் சிலையை திறந்த வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
அப்போது அவர் பேசியதாவது…
எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது.
இங்கு கூடியிருக்கும் கூட்டம் அரசியல் மாநாடு போல் உள்ளது.
இதில் அரசியல் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், அரசியல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என கேட்கிறார்கள். மக்களை சினிமாவின் மூலம் இத்தனை வருடங்களாக மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.
அது என் வேலை. அதை நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
அரசியல் முட்கள், பாம்புகள் நிறைந்த பாதை என்பது எனக்கும் தெரியும்.
கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியதால் நானும் அரசியல் கற்றுக்கொண்டேன்.
1996 முதல் அரசியல் தண்ணீர் என் மீது தெளிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் கேலி செய்கிறீர்கள்.
திட்டுகின்ற அரசியலை இனி கைவிட்டுவிடுவோம்.” என நல்லதொரு அரசியலை முன்னெடுப்போம் என்ற வகையில் பேசினார் ரஜினிகாந்த்.
I know the difficulties of Politics says Actor Rajinikanth