டாப் கியரில் ‘பெல் பாட்டம்’ ஹீரோயின்.; 12 வருடங்களுக்கு பிறகு தமிழில் ஹரிப்ரியா.!

டாப் கியரில் ‘பெல் பாட்டம்’ ஹீரோயின்.; 12 வருடங்களுக்கு பிறகு தமிழில் ஹரிப்ரியா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா இணைந்துள்ள படம் ‘நான் மிருகமாய் மாற’.

இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்.. ஹரிப்ரியா பேசுகையில்…

“செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளேன்.

மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குனர் சத்திய சிவா, எனது கன்னட திரைப்படமான *பெல் பாட்டம்* படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார்.

கதை மிகவும் பிடித்து போக உடன் சம்மதித்தேன். இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருப்பதாக கூறினார்கள்.

எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்.

Hari priya speech at Naan Mirugamaai Maara press meet

ஒரு வடிவத்தை படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில் சிரமம் இருந்தது.. – சத்யசிவா

ஒரு வடிவத்தை படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில் சிரமம் இருந்தது.. – சத்யசிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா இணைந்துள்ள படம் ‘நான் மிருகமாய் மாற’.

இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்.. இயக்குனர் சத்ய சிவா பேசுகையில்…

இந்தத் திரைப்படத்தில் புதியதாக சிலவற்றை நாங்கள் பின்பற்றியுள்ளோம். படமாக நீங்கள் அதனை பார்க்கும் பொழுது, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படத்தில் ஒரு வடிவம் இருக்கும். ஆரம்பத்தில், அதனை நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில் சிறிது சிரமம் இருந்த போதிலும், படம் தற்பொழுது உருவாகியுள்ள விதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்த போதிலும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப்படத்தின் கதையை தொலைபேசியின் வாயிலாக கொரோனா ஊரடங்கின் போது சசிகுமாருக்கு எடுத்துரைத்த பொழுது, வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று உடனே சம்மதித்தார்.

தனக்குள் இருக்கும் இயக்குனரை மறந்து ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் அவர் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவர் பின்னணி இசையமைப்பதில் கை தேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ! இத்திரைப்படத்திலும் அதனை நிரூபித்துள்ளார் ஜிப்ரான்.

ஒளிப்பதிவாளர் ராஜாவை பாராட்டி தான் ஆக வேண்டும். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒன்று இரவு நேரத்தில் அல்லது மழையில் படமாக்கப்பட்டது. இயலாது என முகம் சுளிக்காமல் முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் அவர் பணி புரிந்தார்.

நாயகி ஹரிப்ரியாவிடம் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் சற்றும் தயங்காமல் கதையின் ஆழம் மற்றும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனே சம்மதித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் நாயகி என்பதனை தாண்டி, சசிகுமாரின் மனைவியாக மட்டுமே நம் கண்களுக்கு தெரிவார்.

பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நான் எதிர்பார்த்தவற்றை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு பின் விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை பார்த்தால் நிச்சயம் ஒரு விதமான பயம் ஏற்படும்.

சசிகுமார் மீது சிவப்பு சாயம் கொண்ட ஒரு வாலியை ஊற்றுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு! அது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒரே நாளில் காட்சி அமைக்கலாம் என திட்டம் தீட்டினோம். எட்டு முதல் பத்து நாட்கள் வரை இதற்காக ரிகர்சல் செய்தோம். இப்படி உருவானதே அந்த சண்டை காட்சி.

Sathya siva speech at Naan Mirugamaai Maara press meet

இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் இசையமைக்க சொன்னார் டைரக்டர்.; ஷாக்கான ஜிப்ரான்

இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் இசையமைக்க சொன்னார் டைரக்டர்.; ஷாக்கான ஜிப்ரான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா இணைந்துள்ள படம் நான் மிருகமாய் மாற.

இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்.. இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில்…

இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார்.

அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன்.

படத்தின் தொகுப்பாளர் ஒரு வித்தியாசமான முறையை இப்படத்தில் கையாண்டுள்ளார். ஆரம்பம் முதலே படத்தில் ஒரு வேகம் இருக்கும்.

நானும் சசிகுமாரும் குட்டி புலி திரைப்படத்திற்கு பின் இப்பொழுது ஒன்றிணைகிறோம். படத்தின் வெளியீட்டிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

Ghibran speech at Naan Mirugamaai Maara press meet

சவுண்ட் என்ஜினியராக சசிகுமார் பொருந்துவாரா.?; ஒலிப் பொறியாளர் உதயகுமார் சந்தேகம்

சவுண்ட் என்ஜினியராக சசிகுமார் பொருந்துவாரா.?; ஒலிப் பொறியாளர் உதயகுமார் சந்தேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் குழுவினர் நேற்று (15.11.2022) பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர்.

படத்தின் ஒலிப் பொறியாளர் KNACK ஸ்டுடியோஸ் உதயகுமார் பேசுகையில்:

இந்தத் திரைப்படம் ஒலியை சார்ந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். தொடக்கத்தில், சசிகுமார் எவ்வாறு இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்தது.

எனினும் அவர், ஒரு ஒலிப்பொறியாளரின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்துள்ளது.” என்றார்.

Udhayakumar speech at Naan Mirugamaai Maara press meet

‘சர்தார்’ வெற்றியை அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் வழங்கும் சசிகுமாரின் ‘காரி’

‘சர்தார்’ வெற்றியை அடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் வழங்கும் சசிகுமாரின் ‘காரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’.

சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.

சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

காரி

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.

சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

காரி

Prince Pictures presents Sasikumar starrer KAARI release updates

Actor Sasikumar has garnered unconditional appreciation and support across universal audiences for delivering movies that have been an amalgamation of humour, sentiment, action, family values, and decent entertainment. He is now gearing up for yet another wholesome entertainer titled ‘Kaari’.

Kaari will have the commercial ingredient of Sasikumar movies laced with engrossing action elements.

Producer S Lakshman Kumar of Prince Pictures, whose recent release ‘Sardar’ has become a box office blockbuster is producing ‘Kaari’, which will have its worldwide release on November 25, 2022.

Debutant Hemanth has directed this film, which features newcomer Parvathy Arun in the female lead opposite Sasikumar.

JD Chakravarthy plays a powerful antagonist in this film.

Redin Kingsley, Aadukalam Narain, director Balaji Sakthivel, Naagi Needu, Prem Kumar, Bigg Boss fame Samyuktha, Ammu Abhirami, Ram Kumar, Theni Murugan, and many prominent actors are a part of this star-cast.

The film ‘Kaari’ has its title inspired by the holy deity with the same name worshipped as God. The Kaari trailer that was released earlier has gained a tremendous response.

EXCLUSIVE : அருண் பிரசாத் இயக்கத்தில் MS பாஸ்கர் – வெண்பா – விஸ்வாந்த் இணைந்த படம்

EXCLUSIVE : அருண் பிரசாத் இயக்கத்தில் MS பாஸ்கர் – வெண்பா – விஸ்வாந்த் இணைந்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அந்திரன்’ என்ற குறும்படத்தை எடுத்து தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் அருண் கே பிரசாத்.

இவர் தற்போது வெள்ளித்திரையில் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் புதிய படம் உருவாகி உள்ளது.

வெண்பா

இதில் எம் எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க இளம் ஜோடிகளாக ‘கபாலி’ புகழ் விஷ்வந்த் மற்றும் வெண்பா நடிக்கின்றனர்.

இவர்களுடன் நமோ நாராயணன், ஆகாஷ், ‘சார்பாட்டா’ கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வேல்ராஜிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் ரிலீசான ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்திற்கு இசையமைத்த எஸ் ஆர் ஹரி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

வெண்பா

இப்படத்தின் சண்டை பயிற்சிகளை சரவெடி சரவணன் அமைத்துள்ளார். மணிகண்டன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

‘குன்றம் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக காஞ்சனா தேவி கார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பாகும்.

இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

வெண்பா

MS Baskar Viswanth and Venba new movie update

More Articles
Follows