நடிகை ரோகிணியின் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த சசிகுமார்

நடிகை ரோகிணியின் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ‘3சி சென்னை கார்ஸ் கேர்’ எனும் கார் கேர் நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகர் சசிகுமார் இன்று திறந்து வைத்தார்.

மேலும் ரோபோ சங்கர், நடிகர்கள் ஹரிஷ் & கயல் தேவராஜ், இயக்குநர் மோகன் ஜி , இசையமைப்பாளர் ஜூபீன், நடிகை ரேகா நாயர், விஜய் டிவி அஸார் & நவீன், ஆதித்யா டிவி அகல்யா மற்றும் பாரதிய ஜனதா அறிவுசார் பிரிவு தலைவர் ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார்,

“ரோகிணி எனக்கு நீண்ட நாள் நண்பர். அவரின் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர் மேலும் பல கிளைகளை தொடங்கி வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

பின்னர் நிறுவனர் ரோகிணி பேசும் போது, சசிகுமார் அண்ணன் வந்து திறந்து வைத்து வாழ்த்தியதற்கு நன்றி.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தனது வழக்கமான வேலையுடன் கூடுதல் வருமானம் வரும் மற்றொரு தொழிலை செய்ய வேண்டும்.

அப்படி யோசித்து தான் கடந்த வருடம் எனது இந்த கார் கேர் நிறுவனத்தை அண்ணன் விஜய் சேதுபதி அவர்களை வைத்து துவங்கினேன்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கிளையை துவங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வந்திருந்து வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர் களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

Grand Opening of Chennai Cars Care to be Inaugurated by Actor SasiKumar

டூப்ளிகேட் ஆர்யா.. 70 லட்சம் மோசடி பார்ய்யா..; சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஆர்யா நன்றி

டூப்ளிகேட் ஆர்யா.. 70 லட்சம் மோசடி பார்ய்யா..; சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஆர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா என்பவர், ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிப்புரிந்து வந்துள்ளார்.

இவர் நடிகர் ஆர்யா மீது கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.

அதாவது நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகாரளித்தார்

அந்த பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தும் பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று கொண்டு ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.

இதனால் விசாரணை மேலும் விறுவிறுப்பானது்.

சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் ஒருவர் போலி வலைத்தளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த நபரை (சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக்) போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா,

“சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

Actor Arya thanks cops for nabbing conmen who duped a woman using his name

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தளிக்கும் விஜய்சேதுபதி

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தளிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘லாபம்’.

இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பி. ஜனநாதன். இவர் அண்மையில் காலமானார். எனவே மற்ற படக்குழுவினர் இணைந்து படத்தின் மீத பணிகளையும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்தனர்.

லாபம் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

ஆறுமுகக்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியதாக கூறப்பட்டது.

தற்போது தியேட்டர்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் முடங்கியிருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்ற நிலையில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியை (செப்டம்பர் 10) முன்னிட்டு லாபம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Vijay Sethupathi’s Laabam Grand Release On September 9th

பெண்களுக்காக ‘பூமித்ரா’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

பெண்களுக்காக ‘பூமித்ரா’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார்.

இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் பூமித்ரா என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருக்கும், மேலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் பல நன்மைகளைப் ஊக்குவிப்பதாக, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்நிறுவனம்.

பூமித்ரா சரும தயாரிப்புகள் , ஒவ்வொரு நவீன சருமத்திற்கும் ஏற்ற சரும பராமரிப்பு பொருட்களை, நம் பண்டைய கால அழகு பராமரிப்பை தழுவி, நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்குகிறது.

தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒவ்வொருவரின் தோல் மற்றும் கூந்தலுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சரும தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முழுமையான ஆய்வுக்குப் பிறகு, மிகுந்த கவனத்துடன் கலவை செய்யப்படுகிறது.

பூமித்ராவின் தயாரிப்புகள் சுத்தமானவை, பாதுகாப்பானவை, சைவ பொருட்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுபவை. மேலும் இத்தயாரிப்ப்புகள் சுற்றுசூழல் சுழற்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவை.

தனது இந்த புதிய பயணத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது…

“ஒரு குழந்தையாக, என் பாட்டி முதலான பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க இயற்கை பொருட்களை நம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அது இன்றுவரை என் மனதில் பசுமையாக இருக்கிறது.

பண்டைய இயற்கை பொருட்களின் செயல்திறன் எனது தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மைகளை மட்டுமே வழங்கியது.

பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் இந்த நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்த்னமை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம்.

இன்று வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் தோல் பராமரிப்பில் தேர்வுகள் செய்யும் போது சுற்றுசூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

பூமித்ரா அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சரியான தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்கும், அதே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான மக்களிடையே இயற்கை பொருட்களின் பயன்பாட்டை பரிந்துரைக்கும் புதிய தயாரிப்பாகவும் இது இருக்கும்

கீர்த்தி சுரேஷ் பூமித்ரா தயாரிப்புகள் குறித்து கூறியதாவது. “இயற்கையானது, நிலையானது மற்றும் சிறப்பான பயனை தருவது” என்றார்.

Actress Keerthy Suresh new venture as an entrpreneur with boomithra

சாந்தனுவின் இராவண கோட்டத்தில் நுழைந்த பாக்யராஜ்

சாந்தனுவின் இராவண கோட்டத்தில் நுழைந்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக, Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில், தனது சிறந்த நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது அவர் நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுததடுத்து நடித்து வருகிறார் சாந்தனு.

இது அவரது திரை நட்சத்திர மதிப்பை பெருமளவில் கூட்டியுள்ளது.

அவரது அடுத்த பிரமாண்டமான திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று தான் ‘இராவண கோட்டம்’.

லாக்டவுன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சாந்தனு ராமநாதபுரத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

அவரது பிறந்தநாளிலும் விடுப்பு எடுத்துகொள்ளாமல் அவர் நடித்து வர, அவரது தந்தையும் முன்னணி இயக்குநருமான பாக்யராஜ் அவர்கள், சாந்தனு நண்பர்களுடன் இணைந்து, (ஆகஸ்ட் 24, 2021) சாந்தனு பிறந்தநாளில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நடிகர் சாந்தனு ‘இராவண கோட்டம்’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன், தனது தந்தை கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் வருகை இராவண கோட்டம் படத்தின் மொத்த படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கும் ‘இராவண கோட்டம்’ படத்தினை Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் “முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

மேலும் இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில் ‘கசட தபற’ திரைப்படம் ஆகஸ்ட் 27, 2021 SONYLIV தளத்தில் வெளியாகிறது.

Bhagyaraj’s surprise visit at Ravana Kottam shooting spot

கோலிவுட்டின் டாப் டைரக்டர்கள் இணையும் ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’..; என்னமோ திட்டமிருக்கு.!

கோலிவுட்டின் டாப் டைரக்டர்கள் இணையும் ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’..; என்னமோ திட்டமிருக்கு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களைப் போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோருக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவுள்ளனர்.

இதில் ஒரு சில இயக்குனர்கள் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதில் முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

A production house has been launched by 10 directors named Rain on films

More Articles
Follows