நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் & சேரன்..; வாரிசு நடிகையும் கூட்டணி

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் & சேரன்..; வாரிசு நடிகையும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா பெரியசாமி எழுதி, இயக்கவுள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.

மேலும் சேரன், டேனியல் பாலாஜி , சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி, ஜோமல்லூரி , கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய சித்துகுமார் இசையமைக்கிறார்.

இப்பட மூலம் வாரிசு நடிகை ஷிவாத்மிகாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கவுதம் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் நட்சத்திர தம்பதிகள் ராஜசேகர் & ஜீவிதாவின் 2வது மகள் ஆவார்.

இவர்களின் மூத்த மகள் ஷிவானியும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இப்பட சூட்டிங் மார்ச் மாதம் முதல் நடைபெறவுள்ளது .

Gautham karthik and Cheran joins for new film

Gautham Karthik Cheran

சிரஞ்சீவி & ராம்சரண் இணையும் ‘ஆச்சார்யா’ படத்தில் பூஜா ஹெக்டே..; யாருக்கு ஜோடி தெரியுமா?

சிரஞ்சீவி & ராம்சரண் இணையும் ‘ஆச்சார்யா’ படத்தில் பூஜா ஹெக்டே..; யாருக்கு ஜோடி தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்து வரும் படம் ‘ஆச்சார்யா’.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே கமிட்டாகியிருக்கிறார்.

இதற்கு முன்பு ராம்சரணின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் பூஜா.

கொரட்டல்லா சிவா இப்படத்தை இயக்கி வருகிறார்.

கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Chiranjeevi and Ram Charan joins for new film

chiranjeevi ram charan

‘மோகன் தாஸ்’ படத்திற்காக இணையும் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மோகன் தாஸ்’ படத்திற்காக இணையும் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘காடன்’ மற்றும் ‘எப்ஐஆர்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனை முடித்து விட்டு ‘மோகன் தாஸ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தயாரித்தும் வருகிறார்.

உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதாம்.

இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார்.

இந்நிலையில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.

மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறதாம்.

Vishnu Vishal and Aishwarya Rajesh joins for Mohan Das

vishnu aishwarya rajesh

அரக்கோணம் அதிரடி..; அதிமுகவை தோற்கடிக்க களம் இறங்கிய வக்கீல்கள் படை

அரக்கோணம் அதிரடி..; அதிமுகவை தோற்கடிக்க களம் இறங்கிய வக்கீல்கள் படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMKதிமுக தலைவர் ஸ்டாலின் எப்போது அரக்கோணம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., ரவியை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினாரோ அன்றில் இருந்தே அரக்கோணம் தொகுதி தமிழக சட்டசபை தேர்தலில் தனி கவனம் பெற்ற தொகுதியாக மாறியது.

அதோடு, அசைக்க முடியாத திமுக கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த அரக்கோணம் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆளுமையில் இருக்கிறது.

சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்றாலும் தொகுதியில் பெரும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறார்.

மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாததால் அவர் சார்ந்த ஆளும் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்.

அதே நேரம் திமுக தரப்பில் தொகுதி முழுதும் கட்சியினரிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

10 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாமல் இருப்பதால் இந்த முறை எப்படியும் தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முழு வேகத்தில் கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் மாவட்ட செயலாளர் காந்தி.

அதோடு, தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் அதிமுக தரப்பில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதால் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் தீவிரமான தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், தொகுதியில் எங்கு ஆளும் கட்சியால் இடையூறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக அதை எதிர் கொள்ளும் வகையில் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.

இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள திமுக வக்கீல்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் போட மாவட்ட செயலாளர் காந்தி முடிவு செய்து இருக்கிறாராம்.

இது தவிர அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் ரேசில் இருந்த பவானி வடிவேலுவுக்கு “கலப்பு திருமண சிக்கல்” காரணத்தால் வாய்ப்பு ஏற்கனவே பறிபோய்விட்டது.

கடந்த முறை தேர்தலில் நின்று தோற்ற ராஜ்குமாரும் ” அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட” விவகாரத்தால் வேட்பாளர் ரேசில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தொகுதியில் சர்வே எடுத்த ஐ பேக் டீமும், முன்னாள் அமைச்சரின் தனி டீமும் கொடுத்த ரிப்போர்ட் படி புதிய வேட்பாளர் களம் இறக்கப்பட்டால் திமுக வெற்றியை தவிர்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்களாம்.

அந்த வகையில் திமுக சார்பில் புதிய வேட்பாளாராக வழக்கறிஞர் எழில் இனியன் களம் இறங்க வாய்ப்புகள் அதிகமாம்.

காரணம், ஏற்கனவே தொகுதி முழுதும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் கோரிக்கை புதிய வேட்பாளர்.

அதே நேரம் ஆளும் கட்சி செய்யும் தாறுமாறான செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செலவு செய்யும் பலமும் எழில் இனியனிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக கோஷ்டி பூசலில் எப்போதும் நிறைந்து காணப்படும் அரக்கோணம் திமுகவில் எந்த கோஷ்டியிலும் சிக்காதவர் என்பதும் வக்கீல் எழில் இனியனுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறதாம்.

இதன் காரணமாக மாவட்டத்தின் கரிசன பார்வையும் இவர் மீதே திரும்பி உள்ளதாம்.

அதோடு வக்கீல்கள் பலத்தை அதிகரிக்க அதிமுக உட்பட பல கட்சிகளில் இருந்து பல வக்கில்களை மாவட்டம் முன்னிலையில் திமுகவில் சேர்த்த நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம்.

அதில் சேர்ந்த வக்கீல் ஒருவர் இப்போது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. ரவிக்கு மிக நெருக்கமான நண்பராம் என்பது கூடுதல் தகவல்.

இந்த தகவல்களால் அரக்கோணம் தொகுதியில் உள்ள திமுக வக்கீல்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறதாம்..

Arakkonam DMK Lawyers campaign to win assembly election

‘கைதி’ & ‘மாஸ்டர்’ பட வில்லனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் வசந்தபாலன்

‘கைதி’ & ‘மாஸ்டர்’ பட வில்லனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, காவியத் தலைவன், ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன்.

இதில் ஜெயில் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

தற்போது தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பாளராக மாறியுள்ளார் வசந்தபாலன்.

இவர்கள் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிறுவன புதிய படத்தில் ‘கைதி’ ‘மாஸ்டர்’, உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் தான் ஹீரோவாகிறார்.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்..

Arjun Das turns hero in Vasantha Balan’s next

Vasanthabalan Arjun Das

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்..; தயாரிப்பாளர் இவரா.?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்..; தயாரிப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்.

‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.

இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்.

இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து…

“இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Ram Charan and director Shankar collaborate for a new film

Shankar Ram Charan

More Articles
Follows