தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார் என்பதை அறிந்த உடனே பலரும் பலவாறு பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அவர் செல்லவில்லை என்று தெரிவித்த பிறகு, ஒரு சிலர் அமைதியானாலும், மீனவர் பிரச்சினையை பேச இவர் யார்? என விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில்… கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பலரும் வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்கிவிட்டனர்.
என் தலைவர் ரஜினிகாந்த் பற்றி என் பார்வையில் உள்ள கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன் என ட்விட்டரில் இந்த அறிக்கையை பதிவிட்டுள்ளார்.
கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் இருந்தும் பதவி ஆசை இல்லாதவர் என்றும், மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தும் பணத்தாசை இல்லாதவர் ரஜினி என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு அமைதியானவர், பண்பாளர், ஆன்மிகவாதி என தெரிவித்து, ரஜினியை அறியாதவர்கள் தவறாகப் பேசலாம். அவரை அறிந்தவர்கள் அவரை வணங்குவார்கள் என பதிவிட்டுள்ளார்.
Raghava Lawrence @offl_Lawrence
In the name of freedom of expression people r expressing their views about Thalaivar Rajinikanth, here I’m sharing my views about Thalaivar