‘உயிர் ரசிகர்கள் இருந்தும் பதவி ஆசையில்லாதவர் ரஜினி..’ – லாரன்ஸ்

‘உயிர் ரசிகர்கள் இருந்தும் பதவி ஆசையில்லாதவர் ரஜினி..’ – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Lawranceரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார் என்பதை அறிந்த உடனே பலரும் பலவாறு பேசத் தொடங்கிவிட்டார்கள்.

அவர் செல்லவில்லை என்று தெரிவித்த பிறகு, ஒரு சிலர் அமைதியானாலும், மீனவர் பிரச்சினையை பேச இவர் யார்? என விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில்… கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பலரும் வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்கிவிட்டனர்.

என் தலைவர் ரஜினிகாந்த் பற்றி என் பார்வையில் உள்ள கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன் என ட்விட்டரில் இந்த அறிக்கையை பதிவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் இருந்தும் பதவி ஆசை இல்லாதவர் என்றும், மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தும் பணத்தாசை இல்லாதவர் ரஜினி என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு அமைதியானவர், பண்பாளர், ஆன்மிகவாதி என தெரிவித்து, ரஜினியை அறியாதவர்கள் தவறாகப் பேசலாம்.  அவரை அறிந்தவர்கள் அவரை வணங்குவார்கள் என பதிவிட்டுள்ளார்.

Raghava Lawrence‏ @offl_Lawrence
In the name of freedom of expression people r expressing their views about Thalaivar Rajinikanth, here I’m sharing my views about Thalaivar

 

 

lawrance statement

lawrance about rajini

ஹார்ட் ஆப்ரேஷன் செய்துவிட்டு அஜித்துக்காக காத்திருக்கும் ரசிகர்

ஹார்ட் ஆப்ரேஷன் செய்துவிட்டு அஜித்துக்காக காத்திருக்கும் ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajithஅஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற மாட்டோமா? என பல கலைஞர்கள் சினிமாவில் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தலயின தீவிர ரசிகரான ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) அஜித்துக்காக ஒரு கதையை சில வருடங்களாக எழுதி அதை மெருகேற்றி உள்ளாராம்.

அண்மையில் ஹார்ட் ஆப்பேரஷன் செய்துக் கொண்ட இவர், ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நான் இறப்பதற்குள் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கியே தீருவேன் என தெரிவித்துள்ளார்.
நிச்சயம் இப்படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகையை தனுஷ் காதலிப்பது உண்மையா..?

நடிகையை தனுஷ் காதலிப்பது உண்மையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanushகௌதம் மேனன் இயக்கி தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் வெளியாகாத நிலையில், இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் கதை இதுதான் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் தனுஷ், கல்லூரி மாணவராகவும், ஒரு நடிகையாக மேகா ஆகாஷ்ம் நடிக்கிறார்கள்.

ஒரு கல்லூரி விழாவுக்கு மேகா ஆகாஷ் வரும்போது, அவரைப் பார்த்த தனுஷ் அவரை காதலிக்க தொடங்குகிறாராம்.

இது நிஜ கதையா? அல்லது வதந்தியா? என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.

உலகளவில் பாகுபலி-தெறி-வேதாளத்தை முந்திய கபாலி

உலகளவில் பாகுபலி-தெறி-வேதாளத்தை முந்திய கபாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali baahubali theri vedalamஇந்திய சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உருவாகியுள்ளதையடுத்து, உலக தரத்திற்கு ஏற்ப இங்கே படங்கள் தயாராகி வருகிறது.

மேலும் உலகில் பல நாடுகளிலும் இந்திய மக்கள் வசித்து வருவதால், இந்திய படங்களின் மவுசும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஓர் இணையத்தளம் உலகளவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 25 தென்னிந்திய படங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.

(இதில் ஹிந்தி படங்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

கபாலி- ரூ 87.5 கோடி
பாகுபலி- ரூ 73 கோடி
கைதி 150- ரூ 50.45 கோடி
ஜனதா கரேஜ்- ரூ 41 கோடி
சர்தார் கப்பர் சிங்- ரூ 41 கோடி
கட்டமராயுடு- ரூ 40 கோடி
லிங்கா- ரூ 39 கோடி
ஐ- ரூ 36 கோடி
ஸ்ரீமந்துடு- ரூ 33 கோடி
எந்திரன்- ரூ 30 கோடி
தெறி- ரூ 28.46 கோடி
ப்ரம்மோற்சவம்- ரூ 27 கோடி
கத்தி- ரூ 26 கோடி
பைரவா- ரூ 26 கோடி
Nannaku Prematho- ரூ 24.5 கோடி
ஆகடு- ரூ 24 கோடி
Sarrainodu Around – ரூ 24 கோடி
Bruce Lee The Fighter- ரூ 23.5 கோடி
Attarintiki Daaredi- ரூ 23 கோடி
துருவா- ரூ 23 கோடி
வேதாளம்- ரூ 22 கோடி
டெம்பர்- ரூ 22 கோடி
S/o Satyamurthy- ரூ 20 கோடி
புலி- ரூ19.5 கோடி
Baadshah- ரூ 19 கோடி

ரஜினியை தடுத்தவர்களை திட்டி தீர்த்த ராஜபக்சே மகன்

ரஜினியை தடுத்தவர்களை திட்டி தீர்த்த ராஜபக்சே மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namal rajapaksaபிரபலம் என்றாலே பிராப்ளம்தான்… இது எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? ரஜினிக்கு 100% பொருந்தும்.

ரஜினி பேசினாலும் பிரச்சினை. பேசாவிட்டாலும் பிரச்சினை.

ரஜினி சென்றாலும் பிரச்சினை. செல்லாவிட்டாலும் பிரச்சினை.

அப்படித்தான் லைக்கா ஏற்பாடு செய்த வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருந்தார்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளால் இப்பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
இந்நிலையில், இதுகுறித்து ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கூறியுள்ளதாவது…

‘இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் உதவ மாட்டார்கள்.

தற்போது உதவ வந்த ரஜினியையும் அவர்கள் தடுத்துவிட்டனர்.

அவர்களின் சுயலாபத்திற்காக இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை வேறு திசையில் திருப்பிவிட்டனர்.

தமிழகத்தில் தேர்தல்வரும் போதும் மட்டும்தான் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் நினைவில் வருவார்கள்.

தமிழக அரசியல்வாதிகளின் சுயரூபம் இதுதான்’ என கூறியுள்ளார்.

ரஜினி பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஆவேசம்

ரஜினி பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Vaikoதமிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வேண்டி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை வடநாட்டு மீடியாக்கள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து, ஆதரவு அளித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் இவர்களை சந்திக்க வந்ததால், விவசாயிகளை கண்டுக்கொள்ளாத மீடியாக்கள், நடிகர்கள் மட்டும் இப்போது ஏன் கண்டு கொள்கிறது? என சாடியிருந்தார்.

அதுபோல் மதிமுக தலைவர் வைகோ அவர்களும் டெல்லி சென்று விவசாயிகளுக்கு ஆதரவளித்தார்.

அப்போது ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்தும், இலங்கை மீனவர் பிரச்சினை குறித்தும் ஒரு ரிப்போர்ட்டர் கேள்வி கேட்டார்.

இதனால் ஆவேசமான வைகோ கூறும்போது, விவசாயம், இந்த போராட்டம் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள், வேறு எதையும் கேள்வி கேட்காதீர்கள்.” என்றார்.

More Articles
Follows