ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ படத்தை இயக்கிய சொர்ணம் காலமானார்..; முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ படத்தை இயக்கிய சொர்ணம் காலமானார்..; முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் காலமானார்.

எழுத்தாளர் சொர்ணம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சொர்ணம் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

“திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர்.

மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட திரு சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர்.

கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

நான் நடத்திய “இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர்.

எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

director sornam

Director Sornam passed away

ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்கிறாரா தனுஷ்.?

ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்கிறாரா தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush‘ஜகமே தந்திரம்’ படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இதனிடையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றார் தனுஷ்.

இவருடன் இவரது மனைவி ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார்.

சுமார் 4 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார் தனுஷ்.

எனவே தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட ஓட்டளிக்க தனுஷ் வரவில்லை.

தற்போது ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாம்.

தற்போது கொரோனா ஊரடங்கு சூழ்நிலையால் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

இவையில்லாமல் தனுஷின் மாமனார் ரஜினிகாந்தும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல தயாராக இருக்கிறார்.

அதனால் தனுஷ் அங்கே தங்கியிருந்து மாமானாரின் பரிசோதனைக்காக காத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Rajinikanth to fly to the US for a medical check-up?

‘காதலும் கடந்து போகும்’ இயக்குனருடன் இணையும் ஆர்யா

‘காதலும் கடந்து போகும்’ இயக்குனருடன் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nalan kumarasamyநடிகர் ஆர்யா கைவசம் ‘அரண்மணை 3’, ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘எனிமி’ ஆகிய படங்கள் உள்ளன.

இதில் எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘சூதுகவ்வும்’ மற்றும் ‘ ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் ஆர்யா.

காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு படம் இயக்காமல் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார் நலன் குமாரசாமி.

தற்போது நலன் குமாரசாமி – ஆர்யா இணையும் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே அறிவிப்புகளை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Nalan Kumarasamy to direct Arya?

.

ஒன்றுபடுவோம்… அற்புதம் செய்வோம்..; விலங்குகளையும் அழைக்கும் ராஷி கன்னா

ஒன்றுபடுவோம்… அற்புதம் செய்வோம்..; விலங்குகளையும் அழைக்கும் ராஷி கன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raashi Khannaஇந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது.

இத்தகைய வேளையில், நாம் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை மனித குலத்திற்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் செய்வது சிறந்தது.
இதனைக் கருத்தில் கொண்டே நடிகை ராஷி கன்னா, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கியிருக்கிறார்.

கரோனா பேரிடர் காலம் தொடங்கியது தொட்டே அவர் அவ்வப்போது உதவிகளை செய்துவந்தார்.

தற்போது #BeTheMiracle என்ற பெயரில் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

இதன்மூலம், பசித்தோருக்கு உணவு வழங்குவதே அவரின் இலக்கு. கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோரைத் தேடி பல்வேறு உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்துவந்தாலும் கூட தனது சேவையைப் பற்றி வெளியே தெரிவிக்காதவராக இருந்துவந்தார்.

அவரது நற்செயல்களை மவுனம் சூழ்ந்திருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், நலன் விரும்பிகளும் ஊக்குவித்ததின் அடிப்படையில் தற்போது அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகிறார்.

தனது நற்செயல்களை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் நல் உள்ளம் கொண்ட பலரையும் பெருந்தொற்று நெருக்கடியைக் கடக்க ஏழை, எளிய மக்களுக்கு உதவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் அவர் இதனைச் செய்கிறார்.

#BeTheMiracle சேவையில் ராஷி, ரோடி பேங்க் (Roti Bank)
போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அதேபோல் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அமைப்புகள், முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

இவ்வாறாக நற்பணிகள் பலவற்றையும் செய்ய தனது குடும்பத்தாரின் பங்களிப்பு நண்பர்கள், நலன் விரும்பிகளின் நிதியுதவி மட்டுமே போதுமானதாக இருக்காது என அவர் நினைக்கிறார்.

அவ்வாறு வரும் உதவிகள் சமுத்திரத்தில் சில துளிகள் போல் கரைந்துவிடுவதாகக் கருதுகிறார். இதற்காக நலத்திட்டங்களுக்கு மேலும் நிதி திரட்டும் வகையில், அவரின் குழுவினர் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

அதைப்பார்த்து நல்லுள்ளம் கொண்டோர் உதவிக்கரம் நீட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், தனது முயற்சி குறித்து ராஷி கன்னா கூறுகையில்…

“கரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமான்ய மக்கள் படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை.

#BeTheMiracle மூலம் நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

எனது குழுவினர் இந்த கொடூர நோயின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் வெளியே சென்று மக்கள் படும் இன்னல்களை காட்சிப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர்.

நிறைய குடும்பங்கள் மிகவும் கொடுமையான சூழலில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பட்டினியால் வாடுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்களின் மனங்களைத் திறந்து உதவ வேண்டும் என விரும்புகிறேன்.

பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம்.

நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றுபடுவோம் வாருங்கள்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

Raashii Khanna’s initiative #BeTheMiracle provides food to the ones who have lost their livelihood

மாலை 5 வரை கடைகள் & பேருந்துகள் மதுக்கடைக்கு அனுமதி..; புதுச்சேரி -காரைக்காலில் ஊரடங்கு தளர்வுகள் முழு விவரம்

மாலை 5 வரை கடைகள் & பேருந்துகள் மதுக்கடைக்கு அனுமதி..; புதுச்சேரி -காரைக்காலில் ஊரடங்கு தளர்வுகள் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து இருந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல பலி எண்ணிக்கையும் 20க்கு கீழ் குறைந்துள்ளது.

ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடல்கு இன்றுடன் (திங்கள்கிழமை) முடியவடையவுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி & காரைக்காலில் நாளை ஜூன் 8 முதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் முழு விவரம் இங்கே..

புதுச்சேரி காரைக்காலில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் : ஜூன் 7 முதல் ஜூன் 14 வரை

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஜூன் 8 முதல் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம். பார்களுக்கு அனுமதியில்லை.

உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.

பத்திரப்பதிவு & வாகனப் பதிவு உள்ளிட்ட அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும்.

அனைத்து மத வழிப்பாட்டு தளங்கள் திறக்க அனுமதி.

ஆட்டோ டாக்ஸி தனியார் & அரசு பேருந்துகள் மாலை 5 மணி வரை இயங்கலாம். பூங்கா தியேட்டர்கள் நூலகங்கள் திறக்க அனுமதியில்லை.

பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்,இண்டர்நெட் & கேபிள் ஆப்ரேட்டர், மீடியா குடிநீர் & மின்முறை ஊழியர்கள் 24 மணி் நேரமும் செயல்பட அனுமதி.

திருமணத்தி்ல் 25 நபர்களுக்கும் மரண நிகழ்வுகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி.

முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை எங்கும் கடைப்பிடித்தல் அவசியம்.

Covid 19 Lockdown relaxation in Puducherry and Karaikal updates

இளையராஜா மரணம்.. ரஜினியின் ‘காலா’ 3வது வருடம்.. மன உளைச்சலில் இயக்குனர் ரஞ்சித்

இளையராஜா மரணம்.. ரஜினியின் ‘காலா’ 3வது வருடம்.. மன உளைச்சலில் இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் இழந்து வருகிறோம்.

இந்த நிலையில் ‘திராவிட பெண்கள்’ என்ற ஓவியங்கள் மூலம் பிரபலமானவர் ஓவியர் இளையராஜா. இவர் இன்று மே 7ஆம் தேதி கொரோனா தொற்றால் காலமானார்.

கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.

தனது அழகிய ஓவியங்களால் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் இவர்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் தன் இரங்கல் குறிப்பில்…

தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் திரு. இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்! https://t.co/1ssRWmzDjS

இந்த நிலையில் ஓவியர்இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

“பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்! https://t.co/8zj8MeT4Ie எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று மே 7ல் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படம் ரிலீசாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Director PA Ranjiths condolence message to artist ilayaraja

Artist Ilayaraja

More Articles
Follows