தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ஹேமன்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘காரி’.
படத்தின் நாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்துள்ளார்.
முக்கிய வேடங்களில் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை தீ நகரில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது…
“நான் எப்போதும் கிராமத்து படங்களை செய்வதாக பலரும் கேட்கின்றனர். என்னுடைய பூர்வீகம் அதான்.
அந்த கலாச்சாரத்தில் தான் வளர்ந்தேன். எனவே கிராமத்து படங்களை தான் நான் செய்தேன்..
மேலும் இந்தியாவை விட்டு பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற கிராமத்து படங்களை பார்ப்பதில் தான் நாம் நாட்டோடு ஒன்றிணைப்பது போல இருக்கும். அவர்களும் அது போல தான் கேட்கிறார்கள்.
எனவே நான் கிராமத்து படங்களை தான் தொடர்ந்து செய்வேன். இந்த படம் சிறப்பாக வந்துள்ளது.
அறிமுக இயக்குனர் ஹேமண்த் நன்றாக இயக்கியுள்ளார். இந்த படம் வெற்றி அடையும் போது படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு கார் கொடுக்கக் கூடாது.
அதற்கு பதிலாக அவர் நடிகர் கார்த்தி படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுக்க வேண்டும். கார்த்திக் அவருக்கு நண்பர். நெருக்கமானவர்.”
இவ்வாறு சசிகுமார் பேசினார்