தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கி பிரபல இயக்குனராக உயர்ந்தவர் ரஞ்சித்.
அதன்பின்னர் பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தன் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்தார்.
இந்த நிலையில் அதிரடியாக 5 படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் பா. ரஞ்சித்.
இந்த நிறுவனத்துடன் லிட்டில் ரெட் கார் மற்றும் கோல்டன் ராஷியோ ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.
அதில் முதல் 2 படங்களை லெனின் பாரதி மற்றும் பிராங்க்ளின் இயக்கவுள்ளனர்.
3வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். தனுஷ் படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் கம்பெனிக்கு படம் இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், உள்ளிட்டோர் 4 மற்றும் 5வது படங்களை இயக்கவுள்ளனர்.
இந்த 5 படங்களுக்கான அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “உலக அளவில் பிரசித்தி பெற்ற வார்னர்ஸ் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூட கூட்டு முயற்சியாக பல சிறு தயாரிப்பு நிறுவனங்களை உடன் வைத்து பெரிய திரைப்படங்களை இயக்கும்.
அது மாதிரியான புதிய முயற்சியைத் தான் நாங்களும் இங்கு செய்ய போகிறோம். அதனுடைய முதல் முயற்சி தான் இது. இதில் தயாராகும் படங்களிலும் அரசியல் தொடர்பான கருத்துகள் இடம் பெறும்.
அரசியல் கருத்து படத்தில் இருப்பதால் சென்சார் பெறுவது கடினமாக தான் இருக்கிறது. மெட்ராஸ், குண்டு திரைப்படம் அதை எதிர் கொண்டது.
ஹமெட்ராஸ் படத்தில் 58 இடங்களில் சென்சார் கட் செய்தார்கள். அதன்பின்னர் சில காட்சிகளை சூட் செய்து அதற்கேற்ப காட்சிகளை வைத்தோம்” என பேசினார் பா ரஞ்சித்.
Director Pa Ranjiths 5 movie announcements