தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எல்லா வகை படங்களோடு ஒப்பிடுகையில் ‘வணிக ரீதியான பொழுதுபோக்கு’ படங்களை கொடுப்பது தான் மிகவும் கடினமான விஷயம் என்பது மறுக்க முடியாத உண்மை. நிச்சயமாக, ஒவ்வொரு ‘உணர்ச்சியும்’ ஒரு ‘வகையான’ சினிமாவை குறிக்கும். அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து கொடுப்பது தான் இயக்குனர்களின் பெரிய சவால். அது ஒரு சில இயக்குனர்களுக்கே கை வந்த கலை. அடங்க மறு மொத்த குழுவும் நம்பும் ஒரு விஷயம் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் அத்தகைய திறமையை கொண்டிருக்கிறார் என்பது தான். இயக்குனர்கள் சரண், அமீர் மற்றும் சேரன் போன்ற பிரபலமான இயக்குனர்களின் பள்ளியில் இருந்து வந்தவர் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
“மிகத் திறமையானவர்கள் இருக்கும் ஒரு குழுவில் இருந்து இது போன்ற ஒரு தீர்ப்பை கேட்பது பெரிய விஷயம். குறிப்பாக, சுஜாதா மேடம் அதை சொல்வது பெரிய ஆசீர்வாதம். ஆரம்ப நிலையிலிருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தவர், அவரின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குழு மற்றும் அடங்க மறு படத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது ஒரு சரியான பொழுதுபோக்கு படம் என கூறுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தில், எல்லா பாராட்டும் ஜெயம் ரவி சாருக்கே செல்ல வேண்டும். ஆரம்பத்தில், என் ஸ்கிரிப்ட் மிகவும் சீரியஸான ஸ்கிரிப்டாக இருந்தது, அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் மாற்ற அவர் தான் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு நிறைய கதைகள் காத்திருந்தன, அவர் நினைத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை எளிதில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு, எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது நான் அவரிடம் வியந்த விஷயம். இது தான் ஒரு நல்ல படமாக மாற முக்கிய காரணமாகவும் இருந்தது” என்றார்.
மேலும், இந்த படத்துக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் நான் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்” என்றார்.
இந்த அடங்க மறு படத்தை டிசம்பர் 21ஆம் தேதி க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.