‘பிக்பாஸ்’ முகென் ராவ்வை ஹீரோவாக்கியது ஏன்.? ‘வெற்றி’ இயக்குநர் அஞ்சனா பேட்டி

‘பிக்பாஸ்’ முகென் ராவ்வை ஹீரோவாக்கியது ஏன்.? ‘வெற்றி’ இயக்குநர் அஞ்சனா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjana ali khanஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய
இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.

தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். பிக்பாஸ் முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது….

இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது.

“வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது.

இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பது தான்.

வாழ்வின் இடர்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனித்தத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை.

முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுதனமாக இருப்பவர்.

தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். அப்படியே இப்பட கதாப்பத்திரத்தின் குணத்துடன் ஒத்துபோககூடியவர். முகேன் ராவ் உணர்வுகளை எளிதாக கையாளும் அதே நேரம், ஆக்சன் காட்சிகளையும் எளிதாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.

அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொளிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்.

மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ராண்டி எனும் ரத்னவேலு மற்றும் ஆண்டனி ஆகியோருடன் 25 ஆண்டுகால பழக்கம் எனக்கு. அவர்கள் “வெற்றி” படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் திரைக்கதை கேட்டவுடனே இப்படத்தில் பணியாற்ற இருவரும் ஒத்துக்கொண்டார்கள்.

ஏனெனில் ரசிகர்களை எளிதாக கவரும் தன்மையுடன் அவரவர் துறைகளில் பல புதுமைகளை படைக்க நிறைய வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தது. ரத்னவேலு இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளாராக விளங்குபவர். இந்திய அளவில் கவனம் பெற்ற எந்திரன், சாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்தவர்.

தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமலஹாசனின் “இந்தியன் 2 “ படத்திலும் பணியாற்றி வருகிறார். மிகப்பெரும் படங்களில் பணியாற்றும் அதே நேரம் கலைக்கு மதிப்பளித்து, தரமான சிறு படங்களிலும் பணியாற்ற தவறுவதில்லை அவர். வெகு சிறு பட்ஜெட் படமான குமாரி 21F தெலுங்கு படத்தில் பணியாற்றினார் அவர்.

ரஜினிகாந்த், மகேஷ்பாபு போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் இடைவெளியில் இம்மாதிரியான சிறு படங்கள் செய்து, இன்றைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் எங்கள் படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு பெருமை.

தமிழ் சினிமாவில் எடிட்டிங்கில் பல புதுமைகள் செய்து அசத்தியவர் ஆண்டனி. ஒரு ஷாட்டை வைத்து கதையின் பல முனைகளை மாற்றக்கூடியவர். அவருடான கதை விவாதம் பெரும் சந்தோஷம் தந்தது. திரையில் அவரது மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நிவாஸ் K பிரசன்னா இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் மிகுந்த திறமை கொண்டவர். இசையின் பல பிரிவுகளிலும் எளிதாக பயணம் செய்து அசத்துபவர் அவர் எங்கள் படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி.

அமித்தா ராம் எங்கள் குழுவில் இணைந்திருப்பது எங்கள் குழுவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பலம். படத்தை பற்றிய அவரது நுண்ணிய விவரங்கள் ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது.

தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிப்பது எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. “வெற்றி” திரைப்படம் இந்த அனைத்து நம்பிக்கைளும் பூர்த்தி செய்து பெரு வெற்றி பெருமென நம்புகிறேன் நன்றி.

Director Anjana ali khan about her new film Vetri

சூர்யா & விஜய்சேதுபதியை அடுத்து ஓடிடியில் ரிலீசாகவுள்ள ஜெயம் ரவியின் படம்

சூர்யா & விஜய்சேதுபதியை அடுத்து ஓடிடியில் ரிலீசாகவுள்ள ஜெயம் ரவியின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi bhoomiகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனால் கடந்த 7 மாதங்களாக இந்திய திரையுலகமே நிலைகுலைந்து நிற்கின்றது.

இதனால் நேரடியாக ஆன்லைனில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சூர்யா தயாரித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

இதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பென்குயின்’, வரலட்சுமி நடிப்பில் உருவான ‘டேனி’, யோகிபாபு நடித்த காக்டெய்ல் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி யில் ரிலீசானது.

சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ.ரணசிங்கம்’, அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிசப்தம்’ ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 2ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள ‘பூமி’ திரைப்படமும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் ஸ்டார் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிடவுள்ளது.

Jayam Ravis Bhoomi to release on HotStar

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

premalatha vijayakanthநடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்துக்கு கடந்த 22-ம் தேதி லேசான அறிகுறியுடனான கொரோனா தொற்று இருந்தது.

எனவே சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில தினங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

இன்று இரவு விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறார்களாம்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Premalatha Vijayakanth tests positive for Corona

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் மருத்துவமனையில் அனுமதி.; ஏன்? என்னாச்சு?

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் மருத்துவமனையில் அனுமதி.; ஏன்? என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanஇயக்குனர் மற்றும் நடிகர் என அறியப்பட்ட சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியிர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

இவரின் மேடை பேச்சுக்கென்று தனி ரசிக தொண்டர் படையே உள்ளது.

அவ்வப்போது மிக மிக அவசரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சீமான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இது வழக்கமான பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இன்று இரவே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

NTK leader Seeman was admitted in Vadapalani private hospital

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spb charan ajithபாடகர் நடிகர் எஸ்பிபி மரணம் தொடர்பாக MGM தனியார் மருத்துவமனை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினாரா? போன் பேசினாரா? என்ற கேள்விக்கு எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்தார்.

‘அப்பா இறுதிச் சடங்கிற்கு அஜித் வந்தாலும் வராவிட்டாலும் அது விஷயம் இல்லை.

அவர், என் நண்பர். அவர், வந்தாரா? வரவில்லையா என்பதை என்பது பிரச்னை இல்லை.

அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என பேசினார்.

மேலும் சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு நன்றி.

அப்பா இறந்த துக்கத்தில் இருந்து எங்கள் குடும்பம் மீள்வதற்குள் நிறைய புரளிகள் வருவது வருத்தமாக உள்ளது.”

இவ்வாறு பேசினார் எஸ்பி.சரண்

SP Charan about Ajith not attending SPBs funeral

எவ்வளவு பேரைக் காயப்படுத்துவீர்கள்.? நாங்களே சொல்றோம்.. SPB சிகிச்சை கட்டணம் குறித்து எஸ்பி.சரண் பேச்சு

எவ்வளவு பேரைக் காயப்படுத்துவீர்கள்.? நாங்களே சொல்றோம்.. SPB சிகிச்சை கட்டணம் குறித்து எஸ்பி.சரண் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB and SPB charanபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனை கட்ட எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவியது.

ஆஸ்பிட்டல் பில் 10 கோடி வந்தா உங்களுக்கென்ன..? போன் செஞ்சு புரளி பத்தி கேட்காதீங்க.!?. – எஸ்பி சரண்

இதற்கு விளக்கம் கொடுப்பது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்;

” மருத்துவமனை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது.

நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தமிழக அரசிடம் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் உலவுகிறது.

அஜித் வந்தாரா? ஆறுதல் சொன்னாரா? அது பிரச்னையில்ல.. அது தேவையில்ல ..; – சரண் ஆவேசம்

இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.

இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த ஒரு செய்தி அறிக்கையை தரப்போகிறோம்.

மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தமாக உள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

இவ்வாறு எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

https://t.co/VVZTcF1mPx #MGMHospital #MGMHealthcare #mgm

SPB Charan on father SP Balasubrahmanyam’s health treatment cost

More Articles
Follows