தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல வருடங்களுக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா போஸ்டர்களில் ஒன்று சிம்புவின் கெட்டவன் படம்.
இந்த படத்தில் சிம்புவின் கெட்அப்பே பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படத்தை ஜி.டி. நந்து என்பவர் இயக்கவிருந்தார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கெட்டவன் படம் பற்றி மனம் திறந்துள்ளார்.
அதில்… கெட்டவன் படக்கதையை பரத், ஜீவா ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் நடிக்கவில்லை. பின்னர் தனுஷை சந்திக்க நேரம் கேட்டேன்.
ஆனால் சந்திக்க முடியவில்லை. அதன்பின்புதான் சிம்புவை சந்தித்தேன். அவரும் ஓகே சொல்ல படம் நாளை ஆரம்பிக்க இருந்தது.
ஆனால் அப்போது சிம்பு நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதற்கு காரணமே தனுஷ் தான். என்னிடம் கதையை சொன்ன டைரக்டர் இப்போது உன்னிடம் கதை கூறியிருக்கிறார் என்று சிம்புவிடம் சொல்லிவிட்டார்.
நண்பர்கள் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவார் சிம்பு. அப்போது சிம்பு அப்படியே நம்பி படத்தை நிறுத்திவிட்டார்.
சிம்புவை தன் நண்பன் தனுஷ் சொல்வார். ஆனால் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள்.” என அந்த பேட்டியில் கூறியுள்ளார் நந்து.