டான்ஸ் வேண்டாம்.. ஹீரோ & ஹீரோயின் தொடக் கூடாதுன்னாரு – டான்ஸ் மாஸ்டர் ராதிகா

டான்ஸ் வேண்டாம்.. ஹீரோ & ஹீரோயின் தொடக் கூடாதுன்னாரு – டான்ஸ் மாஸ்டர் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது.

மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் டான்ஸ் மாஸ்டர் ராதிகா பேசியதாவது…

முதன் முதலாகப் படத்திற்கான வேலைக்குப் போகும்போதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடனம் ஆடுபவர்கள் எனவே கலக்கி விடலாம் என நினைத்தேன். இயக்குநர் எனக்கு ரெண்டு விதிகள் விதித்தார்.

ஒன்று டான்ஸ் இருக்க கூடாது மற்றொன்று ஒருவரை ஒருவர் தொட்டு நடிக்கக் கூடாது. இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நானும் இயக்குநரும் சேர்ந்து பேசி இந்தப் படத்திற்கான பாடல்களை வடிவமைத்தோம், சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்கான வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி.

dance master Radhika speech at Theera Kaadhal press meet

போட்டுக்கொடுத்த நடிகரால் பரபரப்பு.. பிரபல நடிகரின் வீட்டில் கட்டுக்கட்டா  பணம் பறிமுதல்

போட்டுக்கொடுத்த நடிகரால் பரபரப்பு.. பிரபல நடிகரின் வீட்டில் கட்டுக்கட்டா  பணம் பறிமுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1985ஆம் ஆண்டு வெளியான ‘ராகிலே குண்டுலு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஷ்ணு மஞ்சு.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவரது மகன் விஷ்ணு மஞ்சு ஆவார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விஷ்ணு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பல துறைகளில் இயங்கிவருகிறார்.

24 ப்ரேம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளராகவும் விஷ்ணு மஞ்சு திகழ்கிறார்.

விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்

இந்நிலையில், நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

A bag of invalid Rs 2000 notes; A popular actor’s tweet with a twist

சரத் பாபு மறைவுக்கு காரணம் இது தான். சுஹாசினி அதிர்ச்சி பேட்டி

சரத் பாபு மறைவுக்கு காரணம் இது தான். சுஹாசினி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சரத் பாபு வின் இறுதி சடங்குகள் நடைபெற்று வரும் வேளையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி மல்டிபிள் மைலோமா எனும் நோயால் அவர் உயிர் இழந்ததாக தெரிவித்தார்.

மனிதனின் எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மா செல்களில் உருவாகும் புற்றுநோய் மல்டிபிள் மைலோமா . இது ஒரு வகை இரத்த புற்றுநோயாகும்.

எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களை, குறிப்பாக பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது. இந்த பாதிப்பால் தான் கடந்த 3 மாதங்களாக சரத்பாபு அவதிப்பட்டு வந்தார் என்றும் நடிகை சுஹாசினி கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

Suhasini revealed sarath babu infected by multiple myeloma

OSAKA விழாவில் விஜய் சூர்யா சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ஆர்யா படங்கள் அள்ளிய விருதுகள்…

OSAKA விழாவில் விஜய் சூர்யா சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ஆர்யா படங்கள் அள்ளிய விருதுகள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது.

இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் பண்டிகையினல் வெளியானது.

‘மாஸ்டர்’ திரைப்படம் ஒன்றல்ல, மூன்று விருதுகளை வென்றுள்ளது. வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறந்த நடன வடிவமைப்புக்கான விருதை தினேஷ்குமாரும் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை விஜய்சேதுபதியும் வென்றனர்.

மேலும் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’, ஆர்யா நடித்த ‘சார்பாட்டா பரம்பரை’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ யோகி பாபு நடித்த ‘மண்டேலா’, சுந்தர் சி நடித்த அரண்மனை 3, சிம்பு நடித்த ‘மாநாடு’ ஆகிய படங்கள் விருதுகளை வென்றுள்ளன.

அதன் முழு விவரம் இதோ…

Tamil movies won Osaka International Film Festival awards

JUST IN சிகரெட் அடிக்காதே என்றவர்.. ஒரு முறை அடிக்க சொன்னார்.; சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி பேட்டி

JUST IN சிகரெட் அடிக்காதே என்றவர்.. ஒரு முறை அடிக்க சொன்னார்.; சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’, ‘சலங்கை ஒலி’, ‘கஜேந்திரா’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மே 22ஆம் தேதி உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு காலமானார்.

அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தன் இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.

இது ஈடுகட்ட முடியாத இழப்பு.

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

#SarathBabu

என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மே 23ஆம் தேதி சென்னை தி-நகரில் வைக்கப்பட்டுள்ள சரத்பாபு உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது..

“நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு சரத்பாபு உடன் பழக்கம் இருந்தது.

ரொம்ப நல்ல நண்பர்.. அருமையான மனிதர். என்னுடைய நலனில் அதிக அக்கறை கொண்டவர் சரத்பாபு.

நான் சிகரெட் பிடிப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்காது. ரஜினி இந்த பழக்கம் வேண்டாம் என அடிக்கடி சொல்லுவார். நீங்க ரொம்ப நாள் நல்ல ஆரோக்கியமா இருக்கணும் என்பார்.

எனவே அவர் முன்பு சிகரெட் பிடிக்க மாட்டேன். உங்க எல்லாருக்கும் தெரியும் சரத்பாபு நானும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

வேலைக்காரன் முள்ளும் மலரும் முத்து அண்ணாமலை பல படங்கள் நடித்திருக்கிறோம். அண்ணாமலை படத்தில் ஒரு காட்சியில் நண்பன் சரத்பாவுக்கு நான் சவால் விடுவதாக ஒரு காட்சி இருக்கும்.

அந்த காட்சியில் 15 முறை நடித்தும் டேக் ஓகே ஆகவில்லை. அப்போது என் அருகில் இருந்த சரத்பாபு.” ரஜினி இங்க வா சிகரெட் பிடி என்று கூறி சிகரெட் கொடுத்தார். ரிலாக்ஸ் பண்ணு என்றார்.

அப்போது சிகரெட் அடித்த பிறகு அந்த காட்சி ஓகே ஆனது.. இதை எதற்கு சொல்கிறேன் என்றால்… அவர் அடுத்தவர் காட்சி நன்றாக வர வேண்டும் என ஒத்துழைக்கும் நடிகர். நல்லவர். அவர் அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

சரத்பாபு உடலுக்கு நடிகர்கள் சூர்யா கார்த்தி சரத்குமார் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

https://youtube.com/shorts/fpMiZqCU1L0?feature=share4 நண்பனை இறுதியாக பார்க்க வந்த ரஜினி – Rip Sarathbabu | #SarathBabu #ripsarathbabu

https://youtube.com/shorts/dFynZMkS5P4?feature=share4 Bhagyaraj Sarathkumar & Radika Sarathkumar Paid There Last Respect to Sarathbabu #ripsarathbabu

https://youtu.be/N29LWoo1yQo எங்க Friendship ஜாஸ்தி வெளிய தெரியாது 💔 Y.Gee. Mahendran | RIP Sarath Babu | #ripsarathbabu

Rajinikanth shared his working experience with sarath babu

உசுர கொடுத்து நடித்த விஜய் ஆண்டனி.; கதறி அழுத ரசிகர்..!

உசுர கொடுத்து நடித்த விஜய் ஆண்டனி.; கதறி அழுத ரசிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.

இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.

இப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படம் பார்த்து வெளியே வந்து பொது விமர்சனம் (Pubilc review) கொடுத்தார்கள்.

அப்போது, ‘பிச்சைக்காரன் 2’ பற்றி கேட்டபோது ஒரு நபர் (விஜய் ஆண்டனி) நீங்க “இசையில நீங்க எப்பவுமே சூப்பர்,  தயாரிப்பாளராவும் கலக்கிட்டீங்க. இயக்குனராகவும் மக்கள் மனச வென்றுட்டீங்க , மேலும்  உசுர கொடுத்து நடிச்சி எங்களை அழ வச்சிட்டீங்க” என ரசிகர்கள் கதறி அழுது ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு   தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Vijay Antony’s Pichaikkaran 2 getting positive reviews from public

More Articles
Follows