ஐஸ்வர்யா கலக்குகிறார்.. ஜெய் கலாய்க்கிறார்.. – நடிகை ஷிவதா

ஐஸ்வர்யா கலக்குகிறார்.. ஜெய் கலாய்க்கிறார்.. – நடிகை ஷிவதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது.

மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகை ஷிவதா பேசியதாவது…

இதற்கு முன்னாடி ரோகினுடன் அதே கண்கள் படத்தில் வேலை பார்த்துள்ளேன். அப்போதே அவரிடம் அடுத்து என்ன எனக் கேட்டேன். காதல் கதை தான் என்றார். என்னை நடிக்க வைப்பீர்களா? என்று கேட்டேன். இந்தக்கதையை அனுப்பினார். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன்.

ஐஸ்வர்யா அடுத்தடுத்து வித்தியாசம் வித்தியாசமாகப் படம் நடித்துக் கலக்கி வருகிறார். அவர் என் நடிப்பு பிடித்திருக்கிறது என்று சொன்னது பெருமை. ஜெய் கலாய்த்துக்கொண்டே இருப்பார்.

நிறைய உறுதுணையாக இருந்தார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாகக் காட்டியுள்ளார். சித்து மிக நல்ல பாடல்களை தந்துள்ளார். சுரேந்தர் சாரிடம் இது யாருடைய கதை எனக்கேட்டேன். சிரித்தார். இந்தப்படம் எல்லோருக்கும் ஈஸியாக கனக்ட் ஆகும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் அம்ஜத் பேசியதாவது…

மேடை ஏறிப் பல நாட்கள் ஆகிவிட்டது, இந்த வாய்ப்பினை அளித்த ரோகினுக்கு நன்றி. படத்தின் முழுக்கதை பற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய பகுதி மட்டும்தான் எனக்குத் தெரியும், ஒட்டு மொத்த கதையும் அதற்குப் பின்னர் தான் தெரியும், என்னுடைய கதாபாத்திரம், தனித்துவமாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி.

actress Sshivada speech at Theera Kaadhal press meet

தீராக் காதலுக்காக மலையேறி நேர்த்திக்கடன் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தீராக் காதலுக்காக மலையேறி நேர்த்திக்கடன் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது.

மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு.

நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது.

ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினோம், அங்கு இருந்த போது அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம் என்றார்.

இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள், ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி

எழுத்தாளர் ஜி. ஆர். சுரேந்திர நாத் பேசியதாவது…

இந்த தீராக் காதல் கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும், ரோகினும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படம் பார்க்கப் போனோம். அப்போது ரோகின் இந்த மாதிரி படம் தமிழில் பண்ணவேண்டும் என்றார். எழுத்தாளருக்கு கிரடிட் தந்தால், அது நடக்கும் என்றேன். நான் தர்றேன் என்றவர், இப்படத்தில் திரைக்கதை வசனம் தனியாக கிரடிட் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. முன்பு எக்ஸ் லவ்வர் சந்திப்பது மிக அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியை விட, எக்ஸ் லவ்வருடன் தான் டச்சில் இருக்கிறார்கள்.

இந்தப்படம் நடக்கும் போது, என் தாய் தந்தையரை உடல் நிலை காரணமாக இழந்தேன். பணத்தின் மீது உறவின் மீது என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். ஆனால் நம்பிக்கை இழக்காத ஒன்று இந்தப்படத்தின் கதை தான். இந்தக்கதை உணர்வுகளை.. நடிகர்கள் நன்றாக நடித்தால் தான் ரசிகர்களிடம் போய்ச் சேரும். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

Aishwarya Rajesh effort for Theera kadhal super success

பிளாக்பஸ்டர் படங்களின் எடிட்டர் இயக்குநரானார்.; அஜித் – தனுஷ் பட நாயகியுடன் கூட்டணி

பிளாக்பஸ்டர் படங்களின் எடிட்டர் இயக்குநரானார்.; அஜித் – தனுஷ் பட நாயகியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான “ஃபுட்டேஜ்’ படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.

“அஞ்சம் பாதிரா”, “கும்பளங்கி நைட்ஸ்,” மற்றும் “மஹேஷின்டே பிரதிகாரம்” போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன்.

மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மலையாள திரையுலகின் மிகப்பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் தமிழில் தனுஷின் ‘அசுரன்’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர்.

இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர்.

மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். அனீஷ் C சலீம் லைன் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து, கூட்டு முயற்சியாக “ஃபுட்டேஜ்” படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ஷினோஸ் பணியாற்ற, கலை இயக்குநராக அப்புண்ணி சாஜன் பணியாற்றுகின்றனர். மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோஸ் VFX பணிகளை கவனிக்க, சமீரா சனீஷால் உடை வடிவமைப்பு பணிகளையும், ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் அவர்களும் செய்கின்றனர்.

இந்த திரைப்படம் ஃபவுண்ட் புட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த முயற்சியானது, திரைப்படத்துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும்.

இந்த திட்டத்தினை சந்தீப் நாராயண் வடிவமைக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் பாடல்களை வழங்க, சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் அறிமுகமே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்ததை அடுத்து, படம் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்குமோ என திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க துவங்கிவிட்டனர்.

மஞ்சு வாரியரின் திரை ஆளுமை, சைஜு ஶ்ரீதரனின் அறிமுக இயக்கம் என இப்படம் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

“Curtain Rises on ‘Footage’: Manju Warrier & Saiju Sreedharan Set Foot in Thrissur for Their New Movie Adventure”

டான்ஸ் வேண்டாம்.. ஹீரோ & ஹீரோயின் தொடக் கூடாதுன்னாரு – டான்ஸ் மாஸ்டர் ராதிகா

டான்ஸ் வேண்டாம்.. ஹீரோ & ஹீரோயின் தொடக் கூடாதுன்னாரு – டான்ஸ் மாஸ்டர் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது.

மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் டான்ஸ் மாஸ்டர் ராதிகா பேசியதாவது…

முதன் முதலாகப் படத்திற்கான வேலைக்குப் போகும்போதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடனம் ஆடுபவர்கள் எனவே கலக்கி விடலாம் என நினைத்தேன். இயக்குநர் எனக்கு ரெண்டு விதிகள் விதித்தார்.

ஒன்று டான்ஸ் இருக்க கூடாது மற்றொன்று ஒருவரை ஒருவர் தொட்டு நடிக்கக் கூடாது. இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நானும் இயக்குநரும் சேர்ந்து பேசி இந்தப் படத்திற்கான பாடல்களை வடிவமைத்தோம், சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்கான வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி.

dance master Radhika speech at Theera Kaadhal press meet

போட்டுக்கொடுத்த நடிகரால் பரபரப்பு.. பிரபல நடிகரின் வீட்டில் கட்டுக்கட்டா  பணம் பறிமுதல்

போட்டுக்கொடுத்த நடிகரால் பரபரப்பு.. பிரபல நடிகரின் வீட்டில் கட்டுக்கட்டா  பணம் பறிமுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1985ஆம் ஆண்டு வெளியான ‘ராகிலே குண்டுலு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஷ்ணு மஞ்சு.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவரது மகன் விஷ்ணு மஞ்சு ஆவார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விஷ்ணு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பல துறைகளில் இயங்கிவருகிறார்.

24 ப்ரேம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளராகவும் விஷ்ணு மஞ்சு திகழ்கிறார்.

விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்

இந்நிலையில், நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

A bag of invalid Rs 2000 notes; A popular actor’s tweet with a twist

சரத் பாபு மறைவுக்கு காரணம் இது தான். சுஹாசினி அதிர்ச்சி பேட்டி

சரத் பாபு மறைவுக்கு காரணம் இது தான். சுஹாசினி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சரத் பாபு வின் இறுதி சடங்குகள் நடைபெற்று வரும் வேளையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி மல்டிபிள் மைலோமா எனும் நோயால் அவர் உயிர் இழந்ததாக தெரிவித்தார்.

மனிதனின் எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மா செல்களில் உருவாகும் புற்றுநோய் மல்டிபிள் மைலோமா . இது ஒரு வகை இரத்த புற்றுநோயாகும்.

எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களை, குறிப்பாக பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது. இந்த பாதிப்பால் தான் கடந்த 3 மாதங்களாக சரத்பாபு அவதிப்பட்டு வந்தார் என்றும் நடிகை சுஹாசினி கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

Suhasini revealed sarath babu infected by multiple myeloma

More Articles
Follows