தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையங்களில் வெளியிடுவதில் இலங்கை தமிழர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார் சேரன்.
எனவே அவர்களின் நலனுக்காக இங்கே போராடியதை தான் அவமானமான கருதுவதாகவும் கன்னா பின்னா ஆடியோ விழாவில் சேரன் பேசியிருந்தார்.
எனவே அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
நான் எதற்காக அப்படி பேசினேன் என்பது என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்.
திருட்டு டிவிடி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது, ஏன் விமர்சகர்கள் குரல் கொடுக்கவில்லை.
அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. அப்போ எங்கள் வாழ்க்கை பற்றி கவலை இல்லையா?
உலகமெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கை தமிழர்கள்தான்) C2H நிறுவன கிளைகளை துவங்கிய போது, அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்.
ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களை குறித்து, நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு.
நல்ல குணம் கொண்ட ஈழத்தமிழர்களுக்கு என்னை பற்றி தெரியும்” என்று விளக்கமளித்திருக்கிறார் சேரன்.