தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார் சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா.
அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாக கூறியிருந்தார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 6-ம் தேதி ரஜினிகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Chennai George Town Court Order to Rajini for ajour on 6th June 2018