தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது கதை திருட்டு புகார் அளித்த ‘குட்டிப்புலி’ சரவண சக்தி

தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது கதை திருட்டு புகார் அளித்த ‘குட்டிப்புலி’ சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer singara velan‘குட்டிபுலி’ மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி.

இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஜே.கே.ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிருந்தார். அப்படத்திற்கு ‘குலசாமி’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது.

இருப்பினும், ‘குலசாமி’ என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி.

மேலும், 25.01.2021 அன்று அப்படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. இப்படத்திற்கான தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடுவதாக இப்படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு ராக் ஸ்டார் நடிக்கும் ‘எங்க குலசாமி’ என்று படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அப்படத்தின் பத்திரிக்கை செய்தியும் வெளியானது.

அந்த செய்தியை சரவண சக்தி படிக்கும் போது, தான் சிங்காரவேலனிடம் கூறிய கதையும் ‘எங்க குலசாமி’ படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரவண சக்திக்கு பின்பு தான் புரிந்தது, சிங்காரவேலன் தன்னை நம்பிக்கை மோசடி செய்துவிட்டார் என்று.

இதற்கு முன் இவர் சிங்காரவேலன் இடம் இருவரும் இணைந்து இப்படத்தை எடுப்போம் என்று கூறியதாகவும் அதற்கு சிங்காரவேலன் ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக இரண்டு நாள் அலுவலக வேலையில் ஈடுபட்டு ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது இப்படத்தின் கதையை அவரிடம் நம்பிக்கையின் பெயரில் கூறியிருக்கிறார். பிறகு சில காரணங்களால் அவருடன் இணைந்து அப்படத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால், MIK Production (P) Ltd தயாரிப்பில் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இப்போது அதே கதையை ராக் ஸ்டார் என்பவரை வைத்து சிங்கார வேலன் எடுக்கவுள்ளார் என்பதையறிந்த சரவண சக்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கில்டு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, பிரபல பத்திரிக்கையில், ‘இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் ‘குலசாமி’ என்ற படத்தின் ஒட்டுமொத்த காப்பிரைட் உரிமை எனது கட்சிக்காரர் கே.விக்னேஷ் குமார் அவர்களிடம் உள்ளது.

எனது கட்சிக்காரரின் அனுமதி இல்லாமல் யாரேனும் இப்படத்தை விற்க முயல்வதோ வாங்க முயல்வதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வழக்கறிஞர் A.M.ரவீந்திரநாத் ஜெயபால் மூலம் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதனால் இவர் இயக்கும் ‘குலசாமி’ படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு நியாயம் கேட்பதற்காக சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சரவண சக்தி சென்றுள்ளார்.

அப்போது சிங்காரவேலன் அங்கு இல்லை, விக்னேஷ் என்பவர் இருந்துள்ளார். அவரிடம் விசாரிக்கும் போது என் பெயர் விக்னேஷ் ஆனால், அந்த அறிவிப்பில் உள்ள விக்னேஷ் நானில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘எங்க குலசாமி’ படத்திற்காக ஒப்பந்த சிங்காரவேலன் ஒப்பந்தம் செய்த அறிமுக நாயகன் ராக் ஸ்டாரும் அங்கு இருந்துள்ளார்.

அவரிடம் கேட்டதற்கு என்னிடம் ஒரு கதை இருக்கிறது நீங்கள் தான் நாயகன் என்றும், இப்படம் OTTயில் வெளியாகும் என்று என்னிடம் கூறினார்கள். இது தவிர வேறு எந்த விபரமும் எனக்கு தெரியாது என்று ராக் ஸ்டார் கூறியுள்ளார்.

சிங்காரவேலன் நடிகர் விமலை வைத்து ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் விமல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இதை செய்திருக்கிறார்.

மேலும், இதில் அவர் பெயர் வெளி வராத வண்ணம் அவருடைய அலுவலகத்தில் இருக்கும் ஒருவரை வைத்து இந்தப் புகாரை கொடுத்திருக்கிறார்.

இவர் மீதும் இவர் நிறுவனத்தின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று (29.03.2021) விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரவண சக்தி புகார் அளித்துள்ளார்.

Case filed against producer Singara Velan

எடப்பாடி கண்ணீர்.. ஸ்டாலின் கண்டிப்பு..; முதல்வரின் பிறப்பை அசிங்கப்படுத்திய 2ஜி ராசா மன்னிப்பு கேட்டார்

எடப்பாடி கண்ணீர்.. ஸ்டாலின் கண்டிப்பு..; முதல்வரின் பிறப்பை அசிங்கப்படுத்திய 2ஜி ராசா மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 26ல் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தபோது நீலகிரி திமுக எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா என்பவர் முதல்வர் பழனிசாமியையும் அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார்.

கள்ள உறவில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.

தமிழக பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அவரது கேவலமான பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வேண்டும்,’ என முதல்வர் பழனிசாமி் கண்ணீர் மல்க பிரச்சாரத்தில் பேசினார்.

திமுகவினர் கண்ணியத்தோடு பேச வேண்டும் என அக்கட்சி தலைவர் முக. ஸ்டாலினும் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் தாய் குறித்து, ஆபாசமாக பேசிய ராசாவின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்’ என பலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து ஊட்டியில் கூறியதாவது…

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி பேசினேன்

ஆனால் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது.

நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன்.

எனது பேச்சால் முதலமைச்சர் காயப்பட்டார் என்ற செய்தி படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

எனவே எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை.”

இவ்வாறு ஆ ராசா பேசினார்.

DMK’s A Raja apologises for ‘offensive’ jibe at Palaniswami

EPS Raja

பணம் குவார்ட்டர் பிரியாணி தர்றவங்க மாஸ்க் கூட தர்றதில்லையே..; மக்கள் நலனில் வேட்பாளர்கள் அலட்சியம்

பணம் குவார்ட்டர் பிரியாணி தர்றவங்க மாஸ்க் கூட தர்றதில்லையே..; மக்கள் நலனில் வேட்பாளர்கள் அலட்சியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவின் 2வது அலை தற்போது உருவெடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 2000-ஐ தாண்டிவிட்டது.

கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி, கொரோனா பரவலை தடுக்க முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இப்போது, இதே மார்ச் மாதம், மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆனால் அரசாங்கமோ அரசியல் கட்சியினரோ கொரோனா அச்சுறுத்தலை அலட்சியம் செய்து வருகின்றனர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிரசார நேரத்தை குறைக்கலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்லலாம்.

தங்கள் கூட நிறைய நபர்களை கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லாமல் குறைவாக கூட்டலாம்.

மேலும் பணமும் குவார்ட்டரும் பிரியாணியும் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மக்களுக்கு மாஸ்க் கொடுக்கலாமே என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

பொதுமக்களும் தங்கள் சமூக பொறுப்பை உணர வேண்டும்..

TN Politicians Election Campaign and Corona Virus Spread updates

டெய்லி ‘சீயான்-60’ அப்டேட்ஸ்..: அப்செட்டாகும் அஜித் ரசிகர்கள்..!

டெய்லி ‘சீயான்-60’ அப்டேட்ஸ்..: அப்செட்டாகும் அஜித் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’.

இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அண்மையில் இப்பட படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த த்ரில்லர் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட்டுகளை தினம் தினம் அறிவித்து வருகின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர், காஸ்ட்டியூம் டிசைனர் முதல் லைட் மேன் வரை தெரிவிக்கின்றனர்.

இதனால் விக்ரம் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

ஆனால் இதை பார்க்கும் அஜித் ரசிகர்களோ பலமுறை ‘வலிமை’ அப்டேட் கிடைக்காமல் டென்சனில் உள்ளனர்.

Ajith fans upset with Chiyaan 60 updates

நிற்க முடியாமல் பேச முடியாமல் விஜயகாந்த் பிரச்சாரம்..; தேம்பி அழும் தேமுதிக தொண்டர்கள்

நிற்க முடியாமல் பேச முடியாமல் விஜயகாந்த் பிரச்சாரம்..; தேம்பி அழும் தேமுதிக தொண்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிடுகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

இவர் மற்ற தொகுதிகளுக்கு செல்லாமல் இங்கேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

இவரது தம்பி சுதீஷ்க்கு கொரோனா தொற்று உள்ளதால் அவராலும் பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு செல்ல முடியவில்லை்.

எனவே பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைத்து வந்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில், அவரை திறந்த வேனில் நிற்க வைத்திருந்தனர்.

ஏற்கெனவே உடல்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரால் வெகு நேரம் நிற்க முடியவில்லை.

மேலும் அவரால் பேசவும் முடியவில்லை என்பதால் கம்பியை பிடித்துக் கொண்டார்.

இதனைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு காலத்தில் நடிகர் சிவாஜிக்கு பிறகு பக்கம் பக்கமாக வீர வசனங்களை சினிமாவில் பேசியவர் கேப்டன்.

சுவற்றில் பாய்ந்து அடித்து உதைத்து ஆக்சனிலும் அசத்தியவர்.

அந்த கம்பீரமானவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்று அவரின் நிலையறிந்து எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் விடுகின்றனர்.

Captain Vijayakanth health issue during Election Campaign 2021

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ் கூட்டணி..?

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தி்ல் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் நடிக்கப் போகிறார் சூர்யா.

இந்த படங்களை முடித்து விட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தகவல்கள் வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘கஜினி, ஏழாம் அறிவு’ ஆகிய படங்கள் இருவருக்குமே நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

10 வருடங்களுக்கு முன் அமைந்த கூட்டணி மீண்டும் அமையாதா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் 65வது படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டதால் டாப் ஹீரோவுடன் இணைய காத்திருக்கிறாராம் முருகதாஸ்.

எனவே தான் சூர்யா படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

After 10 years Suriya and Murugadoss again joins hands together

More Articles
Follows