தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்த படம் மாயா பஜார் 2016.
கன்னடத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்.பி.ஷெட்டி, வஷிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர்.
ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார்.
இந்த பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர்.சி ‘நாங்க ரொம்ப பிஸி’ என தலைப்பு வைத்து படத்தை உருவாக்கியுள்ளனர்.
வீராப்பு, தில்லு முல்லு படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.
வருகிற நவம்பர் 14ல் காலை 11 மணிக்கு தீபாவளியன்று சன் டிவியில் நேரடியாக ரிலீசாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மீது வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு…
சினிமா தயாரிப்பாளர் விஜயா பாவண்ணன் இயக்குனர் பாவண்ணன் அவருடைய புதிய படத் தலைப்பு நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்கிற படத்தின் தலைப்பு 2016 பதிவு செய்திருந்தாராம்.
படம் தயாரான நிலையில் கொரானோ காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
தற்போது குஷ்பு சுந்தர் சி அவர்கள் எங்கள் படத்தலைப்பை திருடி ‘நாங்க ரொம்ப பிஸி’ என்று மாற்றி படத்தை தயாரித்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவுள்ளார்.
அதனை தொடர்ந்து பாவண்ணன் 14வது மாநகர உரிமையாளர் நீதி மன்றத்தில் பட தலைப்பை தடை செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதனையடுத்து தயாரிப்பாளர்கள் குஷ்பு மற்றும் சுந்தர் சி. ஆகியோர் நாளை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Case filed against Naanga Romba Busy team