தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றதில் ரஜினிக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே இவருக்கு தமிழகம் தாண்டியும் பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் மராட்டிய சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., அனில் கோடே ரஜினி குறித்து கூறியதாவது…
மராட்டிய மண்ணின் மைந்தரான ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்க வேண்டும்.
சினிமாத் துறையில் கடவுளின் அவதார அந்தஸ்தை பெற்றிருக்கிறார் அவர்.
எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்க வேண்டும். என்றார்.