தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவரும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.
இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகை ஜூலி.
அவரிடம் ஒரு ரசிகர்கள் நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் உங்கள் நர்ஸ் பணிக்கு திரும்பவில்லையா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜூலி, “பெரும்பாலானோர் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். நான் இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நர்ஸ் பணி என்பது ஒரு புனிதமான வேலை. அதற்கு முழு அர்ப்பணிப்பு தேவை. பார்ட் டைம் வேலையாக அதை செய்ய முடியாது.
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் (நர்ஸ் அண்ட் நடிப்பு) செய்வது மிகவும் கடினமானது.
படப்பிடிக்குச் செல்வதால் நர்ஸ் பணிக்கு செல்வதில் பிரச்சினை வரும் . நேரம் தாமதமாகலாம்.
அப்போது நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க முடியாது என்று தன் பதிலை பதிவிட்டுள்ளார் ஜூலி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு நர்ஸ் ஆக பணிபுரிந்தவர் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வட இந்திய நடிகை ஷிகா மல்ஹோத்ரா என்பவர் சூட்டிங் இல்லாத சமயத்தில் நர்ஸ் ஆக பணி புரிந்து வருகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Bigg Boss Julees reply to her fan in Corono Prevention duty
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) March 29, 2020