தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக இதன் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குவார் என கூறப்படுகிறது.
இதில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிப்பார் எனவும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Arya Will Play Villain Role In Simbus next movie