தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.
இந்த படத்தில் ஆர்யா மற்றும் சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற ஜூன் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் தமிழகமெங்கும் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள பிரபல மாலில் ரசிகர்களை சந்திக்க சென்றனர் படக்குழுவினர்.
இவர்கள் வருவதை முன்பே அறிந்து கொண்ட ரசிகர்கள் திரளாக அந்த வளாகத்தில் திரண்டு இருந்தனர்.
ஆர்யா மற்றும் சித்தியை கண்ட ரசிகர்கள் ஓடோடி வந்து செல்பி எடுக்க முயன்றனர்.
இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரியத் தொடங்கின.
இதனால் கோபமடைந்த ஆர்யா அந்த வளாகத்தை விட்டு வெளியேறினார். இதை அறியாத சில ரசிகர்கள் ஆர்யா வருவார் என காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Arya, who was fierce in the promotions of the film ‘Kathar Bhassha endra Muthuramalingam’