தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளத்தில் வெற்றிப் படங்களால் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
தமிழில் அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
அல்போன்ஸ் புத்திரன் தமிழில் தனது அடுத்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் முகாமிட்டுள்ளார்.
மேலும் பல தமிழ் நட்சத்திரங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து. அதில், “சில நாட்களுக்கு முன் “தமிழ் இசை ராஜா” மேஸ்ட்ரோ இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோபிக்சர்ஸுடன் நான் நடிக்கும் படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்.” என பதிவிட்டுள்ளார்.
Alphonse Puthuren met Ilaiyaraaja for the third time