தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஞானவேல் ராஜா தயாரிக்கும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்.
சண்டக்கோழி 2 படத்தை முடித்துவிட்ட இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவிருக்கிறார்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் பேசும்போது….
தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன். என தொடங்கினார். (ஆனால் நன்றாகவே தமிழ் பேசினார்)
நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில் தான். 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான்.
நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை.
அதற்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ் படம் நடிக்க வேண்டும் என்பது தான்.
எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன்” என்றார் அல்லு அர்ஜுன்.