தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ படம் கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலீசானது.
இதில் ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி நடிக்க இந்தப் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா…. மற்றும் ஏ சாமி ஏ சாமி…” ஆகிய இரண்டு பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வெளியாகி வரவேற்பை பெற்றதால் 2ஆம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் ‘புஷ்பா2’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
ஆனால் இதில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்துக் கொள்ளவில்லை.
நியூயார்க்கில் அமெரிக்கா – இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் அல்லு அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.
76-வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக அல்லு அர்ஜூன் அழைக்கப்பட்டு இருக்கிறாராம்.
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அல்லு அர்ஜுன் விழாவில் கலந்து கொண்டிருப்பதால் இதுபோன்ற காரணத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் உள்ளூரிலேயே இருந்தும் சில நடிகர்கள் தங்கள் படத்தின் பூஜைக்கு கூட வராமல் இருப்பது இங்கே கண்டிக்த்தக்கது.
Allu Arjun not participated in Pushpa 2 pooja