தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
8 ஆண்டுகளுக்கு பிறகு தன் ரசிகர்களை கடந்த 2017 மே மாதம் சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இச்சந்திப்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
புகைப்படம் எடுத்துக் கொண்ட கடைசி நாள் நிகழ்வில் “போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். அதுவரை காத்திருங்கள்’ என தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார் ரஜினி.
இது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இருந்த்து.
இந்நிலையில் மீண்டும் இந்த டிசம்பர் மாத இறுதியில் சந்திக்கிறார். இது போருக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு இருக்குமா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.
வருகிற டிசம்பர் 26ந்தேதி முதல் 31ந்தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த முறையும் சந்திப்பு நடைபெற உள்ளது.
ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கவிருக்கிறாராம்.
இதற்கான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை பெரு நகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளான வி.எம். சுதாகர், சிவராமகிருஷ்ணன் இருவரும் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Again Super Star Rajinikanth going to meet his fans