பிக்பாஸ் 100 நாட்கள் முடியட்டும்; அப்புறம் பேசிக்கிறேன்… ஓவியா திட்டம்

பிக்பாஸ் 100 நாட்கள் முடியட்டும்; அப்புறம் பேசிக்கிறேன்… ஓவியா திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After 100 days of Bigg Boss show i will meet fans says Oviyaபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் நடிகை ஓவியா புகழின் உச்சத்தை தொட்டார் என்றே சொல்லலாம்.

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும் அந்த நிகழ்ச்சியின் 100வது நாள் விழாவில் கலந்துக் கொள்வார் என்பதை பார்த்தோம்.

தற்போது 100 நாட்கள் முடியும் வரை அதை பற்றி அதில் பங்கேற்றவர்கள் பேசக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது.

எனவே 100 நாட்களை கடந்த பின்னர் இந்நிகழ்ச்சி பற்றி மனம் திறந்து தன் ரசிகர்களிடம் பேசப் போகிறாராம்.

இதனை டிவி தொகுப்பாளினி பிரியங்காவிடம் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

After 100 days of Bigg Boss show i will meet fans says Oviya

பிக்பாஸில் ஓவியா அளவுக்கு காயத்ரியை பிடிக்கும்… சீனுராமசாமி

பிக்பாஸில் ஓவியா அளவுக்கு காயத்ரியை பிடிக்கும்… சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seenu ramasamyகமல்ஹாசன் தொகுத்து வழங்கியதாலோ என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் ஹாட் டாப்பிக் ஆனது.

இதை பார்க்காதவர்களோ அல்லது பேசாதவர்களோ இல்லை என சொல்லி விடலாம்.

இந்நிகழ்ச்சி பற்றி ரசிகர்களை போல திரையுலக பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி முடியும் தருவாளை எட்டியுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…

`இன்றைய தமிழ் சினிமாவில் சிவாஜி ஸ்தானத்தில் இருப்பவர் கமல்.

ஒரு நல்ல கலைஞனிடம் எந்த வேலையைச் சொன்னாலும் அதில் அவரின் கலைத்திறமை மின்னும் என்பதற்கு சாட்சி கமல்தான்.

அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அருமை.

இதில் பங்கேற்றவர்களில் எனக்குப் பிடித்த போட்டியாளர்கள் ஓவியா, வையாபுரி, காயத்ரி ஆகியோரை கூறுவேன்.

ஓவியா அளவுக்கு காயத்ரியையும் பிடித்திருந்தது.

காயத்ரி, மனதில் உள்ளதை மறைக்காமல், பொட்டில் அடித்ததுபோல பேசினார்.

ஓவியா கவித்துவமான காவியம். அவர்களைப் பார்ப்பது அபூர்வம்.

இருவரைப் போல உள்ள பெண்கள் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணர செய்தார்கள்.

சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராம் ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வின்னர் ஆகுவார் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜைக்கு விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்கள்

ஆயுதபூஜைக்கு விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Suriya Dhanush Sivakarthikeyan movies will be telecasted on Pooja Holidaysஹாலிடேஷ்ல தியேட்டர்ல டிக்கெட் கிடைக்கலேன்னா என்ன பண்றது? வேற என்ன டிவியை ஆன் பன்னிட்டு வீட்ல படம் பார்க்க வேண்டியதுதான்.

அப்படின்னா, இந்த ஆயுதபூஜை விடுமுறைக்கு என்னென்ன படங்கள் டிவியில ஒளிப்பரப்புவாங்கன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? இதோ அந்த படங்கள்.

விஜய்டிவி படங்கள்…

விஜய் டிவியில் ஜீவா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, தனுஷ் தயாரித்து நடித்து இயக்கிய ‘பவர் பாண்டி’ மற்றும் உதயநிதி நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய புதுப்படங்கள் ஒளிப்பரப்பாக இருக்கின்றன.

இவையில்லாமல் வழக்கம்போல அவர்கள் அடிக்கடி போடும் படங்களான விஜய் நடித்த ‘துப்பாக்கி’, விஷ்ணு விஷால் நடித்த ‘குள்ளநரிக்கூட்டம்’ ஆகிய படங்களையும் ஒளிபரப்புகின்றனர்.

கலைஞர் டிவி…

ஏகே சஜன் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த படம் புதிய நியமம்.

இப்படம், நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதையும் பெற்று தந்தது.

இப்படத்தை வாசுகி என்ற பெயரில் தமிழில் டப் செய்து ஒளிப்பரப்ப உள்ளனர்.

மேலும் ஜீவா நடித்த ‘கோ’, அனுஷ்காவின் ‘அருந்ததி’, ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவான ‘சிவாஜி’ ஆகிய படங்களையும் பூஜை விடுமுறைக்கு ஒளிபரப்ப இருக்கின்றனர்.

ஜீ தமிழ் டிவி

சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘தொண்டன்’, விஜய் ஆண்டனி நடித்த ‘எமன்’, ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’, பி.வாசு இயக்கி லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் ஒளிப்பரப்பாகின்றன.

மேலும் அமீர்கான் நடித்த ‘டங்கல்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ படமும் ஒளிப்பரப்பாகின்றன.

ஜெயா டிவி

விக்ரம் நடித்த ‘ஐ’, சூர்யா நடித்த ‘24’, மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ மற்றும் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ ஆகிய நான்கு படங்களை நான்கு நாள்களுக்கு ஒளிபரப்ப உள்ளனர்.

Vijay Suriya Dhanush Sivakarthikeyan movies will be telecasted on Pooja Holidays

சிம்பு கைகொடுக்கல; மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் ஆதிக்ரவிச்சந்திரன்

சிம்பு கைகொடுக்கல; மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் ஆதிக்ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gv prakash adhik ravichandranஜிவி. பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

இதனையடுத்து சிம்பு, தமன்னா நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஆனால் இது எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

எனவே மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்தார் ஆதிக்.

இவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்திற்கு ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்.

இந்நிலையில் ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்ற டைட்டிலுக்கு பதிலாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா-2’ என்று டைட்டிலை வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம்.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் தெலுங்கு ரசிகர்கள் நான் சொன்னால் கேட்பதில்லை… மகேஷ்பாபு வருத்தம்

என் தெலுங்கு ரசிகர்கள் நான் சொன்னால் கேட்பதில்லை… மகேஷ்பாபு வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mahesh Babuஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் நாளை வெளியாகிறது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மகேஷ்பாபு.

அவர் பேசும்போது….

‘தமிழகத்தில் பெரிய பெரிய ஸ்டார்கள் இருக்கிறார்கள். நான் யாருடனும் போட்டி போட இங்கு வரவில்லை.

‘ஸ்பைடர்’ படம் 125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்தால்தான் வசூலை ஈட்ட முடியும்.

அதனால் தான் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழியில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிரின்ஸ், சூப்பர் ஸ்டார் என்று நான் பட்டங்களை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு பட்டங்கள் மீது எனக்கு விருப்பமில்லை.

தெலுங்கு ரசிகர்களிடம் அப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் கேட்பதில்லை.

தமிழிலும் அதுபோன்ற பட்டங்களை வேண்டாம். எல்லோரும் என்னை நேசித்தால், ரசித்தால் போதும்.

இரண்டு மொழிக்கும் ஏற்ற கதைகள் இருந்தால் தமிழிலும் என் நடிப்பை தொடர்வேன்.” என்றார்.

கேக்காமலே கேட்கும் படத்திற்காக செல்போன்களில் வரும் பேய்

கேக்காமலே கேட்கும் படத்திற்காக செல்போன்களில் வரும் பேய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phonesகன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’.

சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன்.

கன்னடத்தில் 4 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறேன்.

இது என் 5வது படமாக உருவாகியுள்ளது.

தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

இது வழக்கமான பேய் படமாக இருக்காது.

இன்று எல்லாரிடமும் செல்போன் உள்ளது. அதில் மெசேஜ் வழியாக பேய் வருகிறது.

அது மற்ற போன்களுடன் தொடர்பை ஏற்படுத்தி செல்கிறது என்கிற கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன்.’’ என்றார்.

Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phones

More Articles
Follows