தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல், மோகன்லால் நடித்த உன்னைப் போல் ஒருவன், அஜித் நடித்த பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டுலெட்டி.
இவர் இப்போது நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா, டைரக்டர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.
மாறாக நடிகர் ராதாரவி, சாம்ஸ், இயக்குனர்கள் கரு. பழனியப்பன், பிரவின்காந்தி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்விலும் வழக்கம்போல் ராதாரவி சர்ச்சையான கருத்துக்களை பேசினார். அவர் கூறியதாவது…
‘இங்கு ஒருவர் பேசும்போது சினிமாவில் ரஜினி, கமல் காலம் போல இது நயன்தாரா காலம் என்றார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடனும் ஒப்பிட்டு பேசினார்.
அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் சினிமாவில் இருப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத (கிசுகிசு) செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டியும் தனியாக நிற்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.
முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் நடிகை கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை நடிக்க வைக்கலாம். பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களை நடிக்க வைக்கலாம்.
90எம்எல் என்று ஒரு படம் வந்தது. அதில் எதை எதையோ சொன்னார்கள். பிக்பாஸ் நடிகை அதில் நடித்தார்.
இப்போ எல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்க வருகிறவர்கள் படத்தை சரியாக பார்ப்பதில்லை. (காதலர்கள்) அவர்கள் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் விரைவில் ஒரு படம் எடுக்க போகிறேன். ஒன்றரை லிட்டர் என்ற பெயரில் எடுக்க போகிறேன்.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
Radha Ravi Abused Nayanthara at her Kolaiyuthir Kaalam Trailer Launch