தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் #GoBackModi என ட்விட்டரில் பதிவிட்டனர்.
பிப்ரவரி 13-ம் தேதியே நடிகை ஓவியா #GoBackModi கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டார்.
அந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.
“பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும், இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.
தற்போது இதற்கு மரண அடி பதிலாக மீண்டும் 2 வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.
அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம் (freedomofthoughts)’ என தன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே ஓபன் டைப் ஓவியா என பெயரெடுத்த நடிகை ஆச்சே இவர்.. இப்போ சும்மா விடுவாரா..??
— Oviyaa (@OviyaaSweetz) February 18, 2021
Actress Oviya’s reply to her haters