தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கி வெளியான படம் களவாணி.
நசீர் தயாரித்திருந்த இப்படம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
தற்போது களவாணி 2ம் பாகத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சற்குணம்.
இதிலும் முதல் பாகத்தை போல விமல், ஓவியா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற மே 4ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை குறித்த விவரம் வருமாறு…
களவாணி 2 படத்தை தமிழக திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றது.
இந்த உரிமையை மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது.
மெரீனா பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறி படத்தை விற்றிருப்பதாகவும் இதனால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என்றும், எனவே படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒ.குமரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 10 ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.
இது தொடர்பாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கும் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில்…
“கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால் அதை தடுப்பதற்கு நிறைய சக்திகள் இருக்கிறது. வழக்கு தொடர்ந்துள்ள குமரன் யார் என்றே தெரியாது.
இருந்தபோதிலும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என் வீடியோவில் தெரிவித்துள்ளார்.