ஓவரா குடிக்கிறார்.. பீட்டரை நம்பி ஏமாந்துட்டேன்.. 100 நாட்களில் வனிதாவுக்கு கசந்த 3வது கணவர்!?

ஓவரா குடிக்கிறார்.. பீட்டரை நம்பி ஏமாந்துட்டேன்.. 100 நாட்களில் வனிதாவுக்கு கசந்த 3வது கணவர்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumar peter paulதளபதி விஜய்யின் ‘சந்திரலேகா’ பட மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

பின்னர் சினிமாவிலிருந்து வுலகி நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுவும் 2 வருடமே நீடித்தது. அவரை விட்டும் பிரிந்தார் வனிதா.

இதன்பின்னர் ஒரு நடன இயக்குனருடன் இணைந்து வாழ்ந்தார்.

அவரிடம் இருந்து பிரிந்து பிக் பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஜூன் மாத இறுதியில் பீட்டர் பால் என்பவரை காதலித்து 3வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார் வனிதா.

இந்த சர்ச்சை முடிந்த பின் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார் வனிதா.

அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.

சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார் என புகார்களை அடிக்கினார் வனிதா.

இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில்…

“பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி ஏமாந்துவிட்டேன். என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை.

அவர் வீட்டிற்கும் வருவதில்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என புலம்பியிருக்கிறார் வனிதா.

Actress Vanitha Vijayakumar reveals that Peter Paul’s alcoholism ruined their marriage

மதுவை ரகசிய திருமணம் செய்த ஆர்கே. சுரேஷ்..? அப்போ ‘சுமங்கலி’ நடிகை விஷயம் என்னாச்சு..?

மதுவை ரகசிய திருமணம் செய்த ஆர்கே. சுரேஷ்..? அப்போ ‘சுமங்கலி’ நடிகை விஷயம் என்னாச்சு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh and Divyaதாரை தப்பட்டை & மருது உள்ளிட்ட படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் ஆர் கே சுரேஷ்.

இவர் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா நடித்த ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்தார்.

தனக்கும் ‘சுமங்கலி’ சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக ஆர்.கே. சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் என்ன நடந்ததோ திருமணம் நடைபெறவில்லை.

“இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. திருமணம் செய்து கொண்டு பிரச்னைகளைச் சந்திப்பதற்கு முன் விலகி விடுவது நல்லது” என திவ்யா தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளதாம்.

இது ரகசிய திருமணம் என கூறப்படுகிறது.

Actor RK Suresh confirms his marriage with Madhu

‘வலிமை’ அப்டேட்…; ஹைதராபாத் செல்வாரா தல அஜித்..?

‘வலிமை’ அப்டேட்…; ஹைதராபாத் செல்வாரா தல அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

valimai updateதல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

யுவன் இசையமைக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திய இப்பட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

அங்கு தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது.

இந்நிலையில் வலிமை பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

இங்கு மற்ற நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அந்த செட்டில் அஜித் கலந்து கொள்வாரா?

Ajith to join Valimai shoot soon

கணவர் கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்திய நடிகை ஆண் குழந்தைக்கு தாயானார்.

கணவர் கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்திய நடிகை ஆண் குழந்தைக்கு தாயானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meghna raj baby boyகாதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ்.

இவர் பார்ப்பதற்க்கு நயன்தாரா போல் இருப்பதால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கப்பட்டார்.

மேக்னா கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.

இதனையடுத்து கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வை நடத்தினார்.

இது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேக்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Actress Meghana Raj blessed with baby boy

Atman-STR… மரண மாஸ் வீடியோ.. ட்விட்டர் இன்ஸ்டா-வில் இணைந்தார் சிம்பு

Atman-STR… மரண மாஸ் வீடியோ.. ட்விட்டர் இன்ஸ்டா-வில் இணைந்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuசுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு

தற்போது சிம்பு எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு அனைத்து சமூக ஊடகங்களிடம் இருந்து சிம்பு விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (22.10.20) சிம்பு ட்விட்டர் & இன்ஸ்டா சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.

இதற்கான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் செய்யும் உடற்பயிற்சி, சிலம்பம், நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Atman-SilambarasanTR#Atman #SilambarasanTR #STR

STR makes grand re-entry on social media

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi daughterஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ என்ற படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்பபடம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது.

தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக அமைச்சர்களும் விஜய்சேதுபதி எதிர்கால நன்மை கருதி் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினர்.

எனவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து “நன்றி.. வணக்கம்” என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இதனிடையில் விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் ரேப் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மர்ம நபரின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

தற்போது, அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது.

இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Police ask interpol help to find srilankan youth who threaten vijay sethupathi daughter

More Articles
Follows