தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தளபதி விஜய்யின் ‘சந்திரலேகா’ பட மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.
பின்னர் சினிமாவிலிருந்து வுலகி நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில் சில கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அதுவும் 2 வருடமே நீடித்தது. அவரை விட்டும் பிரிந்தார் வனிதா.
இதன்பின்னர் ஒரு நடன இயக்குனருடன் இணைந்து வாழ்ந்தார்.
அவரிடம் இருந்து பிரிந்து பிக் பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஜூன் மாத இறுதியில் பீட்டர் பால் என்பவரை காதலித்து 3வது திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர்களுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார் வனிதா.
இந்த சர்ச்சை முடிந்த பின் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார் வனிதா.
அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.
சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார் என புகார்களை அடிக்கினார் வனிதா.
இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில்…
“பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி ஏமாந்துவிட்டேன். என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை.
அவர் வீட்டிற்கும் வருவதில்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என புலம்பியிருக்கிறார் வனிதா.
Actress Vanitha Vijayakumar reveals that Peter Paul’s alcoholism ruined their marriage