தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெங்களூரு மாநகரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்து வந்தனர்.
அதன்படி கன்னட நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் நைட் பார்ட்டிக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தாராம்.
சிறையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் மன்னன் தாமஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் தொழில் அதிபர் பரத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலும் சோதனை நடத்திய போலீசார் போதைப் பொருட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Actress Sonia Aggarwal arrested in drug case