சரத்குமார் உடல்நிலை பாதிப்பு… ராதிகா விளக்கம்..!

சரத்குமார் உடல்நிலை பாதிப்பு… ராதிகா விளக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Radikaa is Clarified that Sarathkumar Healthமுன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்த தகவல்கள் காட்டு தீயாய் பரவியது.

இதனால் ரசிகர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சரத்குமாரின் மனைவி ராதிகா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது..

“சரத்குமார் அவர்களுக்கு மாரடைப்பு என்ற செய்தியில் உண்மையில்லை.

சரத் நலமாக இருக்கிறார். Food Poison (உணவு ஒவ்வாமை) மற்றும் தசை பிடிப்பால் சின்ன உபாதை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும்தான்.” என்றார்.

தற்போது நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

’ரெமோ டைட்டில் பாடல் உருவானது எப்படி? அனிருத் விளக்கம்

’ரெமோ டைட்டில் பாடல் உருவானது எப்படி? அனிருத் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh Talks About RemoFirstLook and Title Trackமிகுந்த பரபரப்புகளுக்கிடையில் இன்று மாலை சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இத்துடன் ’ரெமோ என் காதலன்’ என்ற டைட்டில் பாடலும் வெளியாகிறது.

இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது..

’ரெமோ’ கேரக்டருக்கு ஒரு தீம் மியூசிக் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அதை உருவாக்க நினைத்தேன்.

பெரும்பாலும் வெறும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை மட்டும் வைத்துதான் தீம் மியூசிக் இருக்கும்.

அதில் குரல் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற ஐடியாவே தோன்றவே அதை உருவாக்கினோம். தற்போது அது ஒரு பாடலாக ஆகிவிட்டது.

அதுதான் ’ரெமோ’ படத்தின் டைட்டில் பாடல். நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’யை மிஞ்சி தனுஷ் படத்தின் புதிய முயற்சி…!

‘பாகுபலி’யை மிஞ்சி தனுஷ் படத்தின் புதிய முயற்சி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush's Vada Chennai to Made in Three Parts!பொதுவாக ஒரு படம் ஹிட்டடித்தால் மட்டுமே அதன் இரண்டாம் பாகம் வெளிவரும்.

அதற்கு உதாரணமா சிங்கம், காஞ்சனா உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.

ஆனால் முதன் முயற்சியாக பாகுபலி படத்தை உருவாக்கும்போதே இரண்டு பாகங்களாக இயக்குவேன் என ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

இயக்குனர் தன் கதை மீது வைத்திருந்த நம்பிக்கையை இது காட்டியது.

தற்போது அதனை மிஞ்சும் வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனுஷின் வடசென்னை படம், மூன்று பாகங்களாக உருவாகிறது.

இதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இதில் தனுஷ் உடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை சந்தோஷ் நாராயணன்.

வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவு… லாரன்ஸிடம் போலீஸ் விசாரணை…!

வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவு… லாரன்ஸிடம் போலீஸ் விசாரணை…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police Enquiry On Raghava Lawrenceவேந்தர் மூவிஸ் மதன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார்.

கிட்டதட்ட ஒரு மாதமாகியும் அவரும் பிடிபடவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.

இதனிடையில் எஸ்ஆர்எம் குழுமம் சார்பாக மதன் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மதன் பற்றிய பல்வேறு கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.

விரைவில் இதுகுறித்த முழுமையான தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரஜினியை வெறுக்க ஒருவராலும் முடியாது…’ கபாலி ரஞ்சித்..!

‘ரஜினியை வெறுக்க ஒருவராலும் முடியாது…’ கபாலி ரஞ்சித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pa Ranjith Exclusive Interview About Rajinikanthஅட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என இரு வெற்றிப் படங்களை கொடுத்தாலும், கபாலி வாய்ப்பு வந்தவுடன் இந்தியா முழுவதும் பிரபலமானார் இயக்குனர் ரஞ்சித்.

தற்போது டீசர் மற்றும் பாடல்கள் பட்டைய கிளப்பி வரும் நிலையில், உலகம் முழுக்க தெரிந்த நபர் ஆகிவிட்டார் எனலாம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு மலையாள பத்திரிகைக்கு கபாலி குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது….

  • ரஜினி படம் வாய்ப்பு வந்தவுடன் டென்ஷனாக இருந்தேன். ஆனால் ரஜினியோ இது உங்க படம். தைரியமாக நினைச்சப்படியே செய்யுங்க.. நல்லதே நடக்கும்’ என்றார்.
  • கபாலியில் ரஜினி மூன்று விதமாக தோன்றி ரசிகர்களை மகிழ்விப்பார்.
  • இதில் சென்டிமெண்ட் இருக்கும். ஆக்ஷன் இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கு உரிய அனைத்தும் இருக்கும்.
  • இதில் உள்ள பாடல்கள் வழக்கமான பாடல்களாக இருக்காது. படத்திற்கு அவசியமான பாடல்களாக அவை இருக்கும்.
  • சகஊழியரையும் அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொண்டார்.
  • நிஜத்திலும் அவர் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார். யாராலும் அவரை நிச்சயம் வெறுக்க முடியாது.
  • ரஜினி சாரை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம்.
  • ஆனால் அதைவிட பல மடங்கு அவரை நேரில் கண்டு அவரது எளிமை, பண்பு ஆகியவற்றை உணர்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யை புகழ்ந்து, ரஜினி-அஜித் ரசிகர்களிடம் சிக்கிய ஜிவி.பி.!

விஜய்யை புகழ்ந்து, ரஜினி-அஜித் ரசிகர்களிடம் சிக்கிய ஜிவி.பி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Ajith Fans Against for GV Prakashசூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர்தான் என அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையிலும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற பேச்சு பரவலாக தமிழகத்தில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்து சொன்ன ஜி.வி.பிரகாஷ்…. “சந்தேகமில்லாமல் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்” என கூறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் ஜி.விக்கு எதிராக போர்க்கொடி பிடித்து, அவருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர்களோடு அஜித் ரசிகர்களும் “எங்க தல இருக்கும்போது தளபதி எப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக முடியும்?” என கேட்கின்றனர்.

இருதரப்பிலும் எதிர்ப்பு வந்தாலும் ஜி.வி. பிரகாஷ் எந்த கருத்தையும் மேற்கொண்டு தெரிவிக்கவில்லை.

More Articles
Follows