தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸை தடுக்க இந்தியா நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒட்டு மொத்த இந்தியர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெஃப்சி தொழிலாளர்களுக்கு உதவ செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் தாராளமாக நிதியுதவி செய்கின்றனர்.
இதனையடுத்து குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து ரூ.5 லட்சம் நிதிவழங்குவதாக அறிவித்தனர்.
இந்த தகவலை குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அஜித் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர் இதற்கு பதிலளித்திருந்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உதவாமல் , திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அந்தத் துறையினருக்கு மட்டும் தான் உதவுவீர்கள் என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று கோபமாக பதிலளித்திருந்தார் குஷ்பூ.
உடனே அஜித் ரசிகர்கள் எல்லாம் ” அவன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கனும் இப்டி அஜித் பேரை உள்ள
இழுக்க கூடாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.
தற்போது இந்த வரிசையில் கஸ்தூரியை தொடர்ந்து குஷ்பூ இணைந்துள்ளார்.
இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள்.. “கஸ்தூரி கிட்டயும் அடி வாங்கியாச்சு குஷ்பூ கிட்டயும் அடி வாங்கியாச்சு” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது குஷ்பு மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
Actress Khushbu Sundar slams Thala Ajith fans